உம்முள் முழுகுகிறேன்!

உம்முள் முழுகுகிறேன்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:49-50.

49பூமியின்மேல் அக்கினியைப் போடவந்தேன், அது இப்பொழுதே பற்றி எரிய வேண்டுமென்று விரும்புகிறேன்.
50ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
துறத்தல் என்றும் பொருள் கொண்டிடுவார்,
தூய தமிழ்ச் சொல் முழுகலுக்கு.
இறத்தல் என்றே பொருளைக் கண்டீர்,
எம்மை மீட்டு எழுப்புதற்கு.
புறத்தில் காணாத் தீமையும் மிகுதி;
புரியா நெஞ்சுள் அழுகுகிறேன்.
அறத்தின் வழிதான் மீட்பு என்று,
அறிந்து உம்முள் முழுகுகிறேன்.
ஆமென்.

அறியு முன், அறிந்த பின்!

அறியு முன், அறிந்த பின்!

கிறித்துவின் வாக்கு:லூக்கா 12:47-48.

47தன் எஜமானடைய சித்தத்தை அறிந்தும் ஆயத்தமாயிராமலும், அவனுடைய சித்தத்தின்படி செய்யாமலும் இருந்த ஊழியக்காரன் அநேக அடிகள் அடிக்கப்படுவான்.
48அறியாதவனாயிருந்து, அடிகளுக்கு ஏதுவானவைகளைச் செய்தவனோ, சில அடிகள் அடிக்கப்படுவான். எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும்; மனுஷர் எவனிடத்தில் அதிகமாய் ஒப்புவிக்கிறார்களோ அவனிடத்தில் அதிகமாய்க் கேட்பார்கள்.

கிறித்துவில் வாழ்வு:
அறியாது செய்யும், அனைத்துத் தவறும்,
ஆண்டவர் அருளால் பொறுக்கப்படும்.
சரியாகக் கேட்டு, தவற்றைத் தவிர்த்தால்,
சாவின் கட்டுகள் அறுக்கப்படும்.
தெரியாது ஆண்டவர் விடுவாரென்று,
துணிகரம் கொண்டால், வெறுக்கப்படும்.  
பரியாகப் போர் வெறி நிறைந்தவராகி,
பாவம் தொடர்ந்தால், நொறுக்கப்படும்!
ஆமென்.

வெங்காயம்!

வெங்காயம்!

வெங்காயம் சுக்கானால்
வெந்தயத்தால் ஆவதென்ன?
எங்காய உடல் வளர்க்க,
எங்கெங்கோ பாடியவர்,
பொங்காத உணவினுக்கு,
வெங்காயம் இல்லையென்று,
சங்காக மனை முழங்க,
தங்கம்போல் தேடுகிறார்!

-கெர்சோம் செல்லையா.

உண்மையில்லாதோர்!

உண்மையில்லாதோர் சேரும் இடம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:45-46.

45அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால்,
46அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.

கிறித்துவில் வாழ்வு:
உண்மையில்லாதோர் சேரும் இடத்தில்,
ஒரு பெரும் பங்கு சேர்ப்போர்தான்,
அண்மையில் நமது தலைவர்களாயினர்;
அதுதான் இன்றைய வரலாறு.
கண்ணினில் நீரும், நெஞ்சினில் வலியும்,
கடந்த நாட்களில் தந்தவர்தான்,
வெண்மையாய் மாறி, மனந்திருந்திடுவார்;
விடுதலை வாக்கை நீ கூறு!
ஆமென்.

உண்மையும் மதியும்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா: 12:41-44.

41அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமையை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
42அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிகொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?
43எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
44தனக்குள்ளதெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
உண்மையும் மதியும் உயர்வின் வழியாம்;
உயர விரும்பின் இவையிரு விழியாம்.
விண்ணினின் அரசன் உரைக்கும் மொழியாம்;
விரும்பாதிருப்பின் விளையுமே பழியாம்.

மண்ணினில் மாந்தர்க்கு வேறே வழியாம்.
மாயையைக் காணா மயங்கிய விழியாம்.
எண்ணுவீர் உயர இறைவனின் மொழியாம்;
ஏறும் வழியில் இல்லை பழியாம்!
ஆமென்.

அறியாத அவ்வேளை!

அறியாத அவ்வேளை!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:38-40.

38அவர் இரண்டாம் ஜாமத்திலாவது மூன்றாம் ஜாமத்திலாவது வந்து, அவர்கள் அப்படியே இருக்கக்கண்டால், அவ்வூழியக்காரர் பாக்கியவான்கள்.39திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.40அந்தப்படியே நீங்கள் நினையாத நேரத்தில் மனுஷகுமாரன் வருவார், ஆகையால் நீங்களும் ஆயத்தமாயிருங்கள் என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
நெஞ்சைத் திருடும் தெய்வம் வந்து,
நேரில் அழைக்கும் அவ்வேளை,
கொஞ்சம்கூட அறியாததனால்,
கிறித்து போன்று வாழ்வோமே.
நஞ்சை இன்று அமுது என்று,
நம்பி வாழ்வை அழிக்காமல்,
கெஞ்சி நாமும் திருந்தி வாழ,
கிறித்து முன்பு தாழ்வோமே!
ஆமென்.

கிறித்துவில் வாழ்வு:
இங்கே யாரோ எச்சில் இடுவார்,
என்று நினைத்துப் பிழைக்காமல்,
அங்கேயிருந்து, அனைத்தும் காணும்,
ஆண்டவர் மகிழ ஊழைப்போமே.
தங்க மகனே தன்மண நாளில்,
தந்திடும் விருந்தில் பங்குபெற,
எங்குமெதிலும், என்னிலை வரினும்,
யாவிலும் உண்மை கொள்வோமே!
ஆமென்.

உண்மை ஊழியத்தின் பரிசு!

உண்மை ஊழியத்தின் பரிசு!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:35-37.

35உங்கள் அரைகள் கட்டப்பட்டதாகவும், உங்கள் விளக்குகள் எரிகிறதாகவும்,
36தங்கள் எஜமான் கலியாணத்திலிருந்து வந்து தட்டும்போது, உடனே அவருக்குத் திறக்கும்படி எப்பொழுது வருவார் என்று காத்திருக்கிற மனுஷருக்கு ஒப்பாகவும் இருங்கள்.
37எஜமான் வரும்போது, விழித்திருக்கிறவர்களாகக் காணப்படுகிற ஊழியக்காரரே பாக்கியவான்கள். அவர் அரைகட்டிக்கொண்டு, அவர்களைப் பந்தியிருக்கச்செய்து, சமீபமாய் வந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்வார் என்று மெய்யாகவே உங்களுக்குச்சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
இங்கே யாரோ எச்சில் இடுவார்,
என்று நினைத்து உழைக்காமல்,
அங்கேயிருந்து, அனைத்தும் காணும்,
ஆண்டவருக்கு ஊழைப்போமே.
தங்க மகனே தன்மண நாளில்,
தன் கையாலே விருந்தளிக்கும்,
எங்குமில்லா நற்பேறடைய,
எதிலும் உண்மை கொள்வோமே!
ஆமென்.

அங்கே வாங்கி, இங்கே கொடுப்போம்!

இங்கே கொடுத்து அங்கே வாங்கும்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:33-34.

33உங்களுக்கு உள்ளவைகளை விற்றுப்பிச்சைகொடுங்கள், பழமையாய்ப்போகாத பணப்பைகளையும் குறையாத பொக்கிஷத்தையும் பரலோகத்திலே உங்களுக்குச் சம்பாதித்துவையுங்கள், அங்கே திருடன் அணுகுகிறதுமில்லை, பூச்சி கெடுக்கிறதுமில்லை.
34உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ அங்கே உங்கள் இருதயமும் இருக்கும்.

கிறித்துவில் வாழ்வு:
அங்கே வாங்கி, இங்கே கொடுக்கும்,
ஆண்டவர் விருப்பைப் புறக்கணித்து,
இங்கே வாங்கி எதுவும் கொடாது,
இழக்கின்றவரோ இன்னாட்டார்.
எங்கே சேர்த்தால் நிலைக்கும் என்னும்,
இறையறிவை உட்கொண்டு,
பங்கம் இன்றி, பாங்காய்க் கொடுப்பின்,
பரத்திற்கவரே நன்வீட்டார்!
ஆமென்.

ஒன்றைத் தேடி!

ஒன்றைத் தேடுவோம்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 12:31-32.

31தேவனுடைய ராஜ்யத்தையே தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.
32பயப்படாதே சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார்.
கிறித்துவில் வாழ்வு:
ஓன்று மட்டும் போதுமென்று,
உம்மை நோக்கிப் பார்க்கையில்,
இன்று எங்கள் இல்லங்களில்,
இல்லை ஒரு குறையாம்.
சென்று பார்த்துத் தேடுகின்ற,
சிற்றின்பமாம் வழிகளில், 
நின்று எவர் வேண்டினாலும்,
நேரிடாது நிறைவாம்!
ஆமென்.