நாற்பது ஆண்டுகள் நாட்டில் கற்றும்,
நடத்தும் தலைமை கிடைக்காது,
கார் இருள் காட்டில் கற்றுத் தேறும்,
கடவுட் தொண்டரைப் பாருங்கள்.
பார்வோன் நாட்டில் கற்றது வீரம்;
நேர்மை நெஞ்சில் ஈரமும் வேண்டும்.
நிறைக்கும் இறை முன் வாருங்கள்!
The Truth Will Make You Free
இருபது முப்பது இலகாரத்தில்,
இறையின் மக்கள் வளரவே,
அருவருப்பாக எகிப்தியர் கண்டு,
ஒருவரும் எவ்வித பயன் பெறாமல்,
ஊழியம் செய்து தளரவே,
தருகிற பொருளியல் பேறு கொண்டு,
தம்மினத்தையும் தூக்கினர்!
பிறரை வதைத்து, பெரு மேடெழுப்பி,
பிரமிட் என்பதாய் விளிக்கிறார்.
குறை காணாத பல பேர் எழும்பி,
கோபுர அழகிலும் களிக்கிறார்.
பறை அறிவிக்கும் பற்பல நூலை,
பண்பாடென்றும் தொகுக்கிறார்.
இறையோ பெரு மூச்சை நினைத்து,
ஏழைக்கு வழி வகுக்கிறார்!
இப்படி எகிப்து வந்தவர் தொகையோ,
எழுபது என்று சொல்கிறார்.
அப்படி வந்தவர் தான் பெருத்து,
அடிமை நிலைக்குச் செல்கிறார்.
ஒப்பிட இயலாத் துயரின் வகையோ,
எப்படி இவரை மீட்க இயலும்?
இறையே என்று தாழ்கிறார்!
இப்படி எகிப்து வந்தவர் தொகையோ,
எழுபது என்று சொல்கிறார்.
அப்படி வந்தவர் தான் பெருத்து,
அடிமை நிலைக்குச் செல்கிறார்.
ஒப்பிட இயலாத் துயரின் வகையோ,
எப்படி இவரை மீட்க இயலும்?
இறையே என்று தாழ்கிறா
பதி மூன்றாண்டுகள் அடிமைப் பட்டவர்,
பார்வோன் கனவால் விடுதலையானார்.
அதி உயர் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்;
அனைவர் உண்ணும் நெடும்பயிரானார்.
எதிரெதிராகக் கெடுத்துக் கெட்டவர்,
இவர் முன் வந்தார், காலில் வீழ்ந்தார்.
மதி நிறை யோசப் மன்னிப்பளித்தார்.
மாந்தர் போற்ற நூலில் வாழ்ந்தார்!
(நைல் ஆற்றின் பாகர் யூசப் கால்வாய்/ “BAHR YUSSEF” யோசேப்பால் கட்டப்பட்டு, எகிப்து நாட்டைச் செழிக்க வைப்பதாக, வரலாறு சொல்கிறது.)