இருபது முப்பது இலகாரத்தில்,

இறையின் மக்கள் வளரவே,

அருவருப்பாக எகிப்தியர் கண்டு,

ஆயரை அடிமை ஆக்கினர்.

ஒருவரும் எவ்வித பயன் பெறாமல்,

ஊழியம் செய்து தளரவே,

தருகிற பொருளியல் பேறு கொண்டு,

தம்மினத்தையும் தூக்கினர்!

பிறரை வதைத்து, பெரு மேடெழுப்பி,

பிரமிட் என்பதாய் விளிக்கிறார்.

குறை காணாத பல பேர் எழும்பி,

கோபுர அழகிலும் களிக்கிறார்.

பறை அறிவிக்கும் பற்பல நூலை,

பண்பாடென்றும் தொகுக்கிறார்.

இறையோ பெரு மூச்சை நினைத்து,

ஏழைக்கு வழி வகுக்கிறார்!

May be an image of the Great Sphinx of Giza