யாருக்கு மதிப்பு?

அடியரா? ஆண்டவரா?

நற்செய்தி: யோவான் 4:41-42. 41.

அப்பொழுது அவருடைய உபதேசத்தினிமித்தம் இன்னும் அநேகம்பேர் விசுவாசித்து,42. அந்த ஸ்திரீயை நோக்கி: உன் சொல்லினிமித்தம் அல்ல, அவருடைய உபதேசத்தை நாங்களே கேட்டு, அவர் மெய்யாய்க் கிறிஸ்துவாகிய உலகரட்சகர் என்று அறிந்து விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

நல்வழி:

வாக்குரைக்கும் அடியருக்கு,

வழங்குகின்ற மதிப்பை,

ஆக்குகின்ற இறைவனுக்கு,

அளிப்பாயா மனிதா?

தூக்கியுன்னை உயர்த்துகின்ற,

தூயவரின் கரத்தை,

போக்குரைத்து உதறுவது,

போதாதோ? இனி வா!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.