ஒருத்திக்கொருவன்!
நற்செய்தி: யோவான் 4:15-18.
நல்வழி:
ஒருத்திக்கொருவன் ஒருவனுக்கொருத்தி;
உண்மையில் இதுதான் இறைவிருப்பு.
இருக்கிற இணையின் நெஞ்சைக் குத்தி,
இன்னமும் தேடின், கறையிருப்பு.
நெருக்கிடும் காமம் உருக்கிடும் என்று,
நினைக்க மறப்பின் எரிநெருப்பு.
பெருக்கிடும் தீட்டில் பெரிது திருட்டு;
பிழைக்க விரும்பின் மனந்திருப்பு!
ஆமென்.
-செல்லையா.