ஓடும் பேதுரு!

கிறித்துவில் வாழ்வு:  

மும்முறை மறுத்த பேதுரு இன்று,  
முதல்வனாய் அறிய ஓடுகின்றார்.  
இம்முறை கேட்பது சரியோயென்று,  
இயேசுவின் உடலைத் தேடுகின்றார். 
செம்மறை காட்டும் சீலைகள் கண்டு.  
சிந்தை நடுங்கவே ஆடுகின்றார்.  
தம்மிடம் இருக்கும் ஐயம் கொண்டு, 
தயக்கமுற்றவர் வாடுகின்றார்!
ஆமென்.  

-கெர்சோம் செல்லையா.