இறைப் பற்றும் நேர்மையும்!
இறைவாக்கு: லூக்கா 2:25.
25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
இறைவாழ்வு:
இறைப் பற்று கொண்டவர் என்றால்,
இறைவனின் பண்பு பெற்றிடவேண்டும்.
நிறைவான நேர்மை வழியில்,
நித்தம் நடந்து கற்றிட வேண்டும்.
குறைப் பேறாய் பிறந்த நானோ,
குற்றம் பெருகத் தலை குனிந்தேன்.
சிறைப் பறவை ஆகாதிருக்க,
சீரேசுவே உமைப் பணிந்தேன்!
ஆமென்.
![Image may contain: night](https://scontent.fmaa3-1.fna.fbcdn.net/v/t1.0-0/s480x480/34107637_1850318558332271_2005302681266028544_n.jpg?_nc_cat=0&oh=b81f103d60210d19114060a40618de11&oe=5BC4367A)