இறைப் பற்றும் நேர்மையும்!

இறைப் பற்றும் நேர்மையும்!
இறைவாக்கு: லூக்கா 2:25.
25 அப்பொழுது சிமியோன் என்னும் பேர்கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல்வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்தஆவி இருந்தார்.
இறைவாழ்வு:
இறைப் பற்று கொண்டவர் என்றால்,
இறைவனின் பண்பு பெற்றிடவேண்டும்.
நிறைவான நேர்மை வழியில்,
நித்தம் நடந்து கற்றிட வேண்டும்.
குறைப் பேறாய் பிறந்த நானோ,
குற்றம் பெருகத் தலை குனிந்தேன்.
சிறைப் பறவை ஆகாதிருக்க,
சீரேசுவே உமைப் பணிந்தேன்!
ஆமென்.

Image may contain: night

Leave a Reply