மாற்றுவீர் சட்டங்களை!

​நற்செய்தி மாலை: 2:25-26.

அதற்கு அவர் அவர்களிடம், ‘ தாமும் தம்முடன் இருந்தவர்களும் உணவின்றிப் பசியாய் இருந்தபோது தாவீது என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? அபியத்தார் தலைமைக் குருவாய் இருந்தபோது தாவீது இறைஇல்லத்திற்குள் சென்று, குருக்களைத் தவிர வேறு எவரும் உண்ணக்கூடாத அர்ப்பண அப்பங்களைத் தாம் உண்டதுமன்றித் தம்மோடு இருந்தவர்களுக்கும் கொடுத்தார் அல்லவா? ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
ஒழுங்குபடுத்தும் சட்டம் இன்று,
உயிரைக் காக்க வெறுக்குமெனில், 
விழுங்கி அதனை ஏப்பம் விடுவோம்;
வேறொரு சட்டம் பிறப்பித்து!
அழுது கதறும்குழந்தையின் ஒலிக்கு,
அன்னையின் காது மறுக்குமெனில்,
எழுந்து அவளை அடக்கம் செய்வோம்;
இறந்துபோனாள் அவள் என்று!
ஆமென்.