நோயுற்றவருக்கே மருத்துவர்!

நோயுற்றவருக்கே மருத்துவர்!

நற்செய்தி மாலை: மாற்கு 2:15-17. “பின்பு அவருடைய வீட்டில் பந்தி அமர்ந்திருந்தபோது வரிதண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். ஏனெனில் இவர்களுள் பலர் இயேசுவைப் பின்பற்றியவர்கள். அவர் பாவிகளோடும் வரிதண்டுபவர்களோடும் உண்பதைப் பரிசேயரைச் சார்ந்த மறைநூல் அறிஞர் கண்டு, அவருடைய சீடரிடம், ‘ இவர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பதேன்? ‘ என்று கேட்டனர். இயேசு, இதைக் கேட்டவுடன் அவர்களை நோக்கி, ‘ நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவருக்கே மருத்துவர் தேவை. நேர்மையாளர்களை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன் ‘ என்றார்.”

நற்செய்தி மாலை:

அணியணியாய் மருத்துவர்கள்

ஆயிரம்பேர் வந்தாலும்,

பிணியென்று தெரிந்தால்தான்

பேதையர்கள் திரும்பிடுவார்.

மணியொலியாய் இறைவாக்கு

மன்றங்களில் ஒலித்தாலும்,

பணிவுள்ள நெஞ்சினைத்தான்

படைத்தவர் விரும்பிடுவார்!

ஆமென்.