இவரது வெறியை மாற்றீரோ?


​இவரது வெறியை மாற்றீரோ?

நற்செய்தி மாலை: மாற்கு: 2:23-24.

“ஓய்வு நாளில் இயேசு வயல் வழியே செல்ல நேர்ந்தது. அவருடைய சீடர் கதிர்களைக் கொய்துகொண்டே வழி நடந்தனர். அப்பொழுது பரிசேயர் இயேசுவிடம், ‘ பாரும், ஓய்வு நாளில் செய்யக்கூடாததை ஏன் இவர்கள் செய்கிறார்கள்? ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
புல்லை மாடு மேய்ந்ததனாலே,
புனிதம் போனது எனலாமோ?
நெல்லை ஓய்வில் கொய்ததனாலே,
நேர்மையில் விழுந்தார் எனலாமோ?
கல்லாதவரும் சரி என்றுரையார்;
கடவுளின் மக்கள் அறியீரோ?
எல்லாச் செயலும் காணும் இறையே, 
இவரது வெறியை மாற்றீரோ?
ஆமென்.