ஏழையை நினைப்பீரே!

என்னிறக் கட்சிகள் வந்தாலும்,
இந்தியர் இவரென எண்ணவில்லை.
அன்னியர் என்று ஒதுக்காத
ஆண்டவா, இவரை மீட்பீரே!

சென்னிறக் குருதி சிந்துமிவர்,
சீக்கிரம் உயிர் வாழ்வடைவதற்கு,
பொன்னிற நெஞ்சு கொண்டோரே,
புவியில் ஏழையை நினைப்பீரே!
-கெர்சோம் செல்லையா.

இடுப்புக்கு கோவணம் இல்லை ;
கையிலே கொடி  -  இதுதான் 
' சு ' தந்திரம் !

 

விடுதலை நாள் வாழ்த்து

இந்திய விடுதலை நாள் வாழ்த்து:

வீடும் குடும்பமும் போதுமென்று
விரும்பிப் பதுங்கும் இந்தியரே,
நாடும் இனமும் வாழ்ந்தால்தானே,
நமக்கு உயர்வு அறிவீரே!
ஓடும் வாழ்வின் உண்மையறிந்து
ஒருவரையொருவர் மதிப்பீரே.
கேடும் துன்பும் கிட்டவராது;
கிறித்து அருளில் மகிழ்வீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

இந்திய விடுதலை நாள் வாழ்த்து:

வீடும் குடும்பமும் போதுமென்று 
விரும்பிப் பதுங்கும் இந்தியரே,
நாடும் இனமும் வாழ்ந்தால்தானே,
நமக்கு உயர்வு அறிவீரே!
ஓடும் வாழ்வின் உண்மையறிந்து 
ஒருவரையொருவர் மதிப்பீரே.
கேடும் துன்பும் கிட்டவராது;
கிறித்து அருளில் மகிழ்வீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.