மறைவாக்கின் வெளிச்சத்தில்

நல்வாழ்த்து:
நம் செயல் கண்டு மகிழும் தெய்வம்
நம்மை மட்டுமா வாழ்த்துகிறார்?
இம்மை மறுமை நன்மையும் தந்து
இனிய வீட்டையும் வாழ்த்துகிறார்!

நல்வாக்கு:
மத்தேயு 26:53-54.
“நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? ‘ என்றார்.”

நல்வாழ்வு:
இறைவாக்கு நிறைவேற
இறைமகனே வந்தார்;
நிறைவாழ்வு நாமடைய
நேர்வழியைத் தந்தார்.
குறை நீங்க விரும்பிடுவோர்
கிறித்துவுக்குள் வருவார்.
மறைவாக்கின் வெளிச்சத்தில்
மகிழ்ந்தன்பு தருவார்!
ஆமென்.

மறை வாக்கின் வெளிச்சத்தில் .....
நல்வாழ்த்து:
நம் செயல் கண்டு மகிழும் தெய்வம் 
நம்மை மட்டுமா வாழ்த்துகிறார்?
இம்மை மறுமை நன்மையும் தந்து  
இனிய வீட்டையும் வாழ்த்துகிறார்!

நல்வாக்கு:
மத்தேயு 26:53-54.
"நான் என் தந்தையின் துணையை வேண்ட முடியாதென்றா நினைத்தாய்? நான் வேண்டினால் அவர் பன்னிரு பெரும் படைப் பிரிவுகளுக்கு மேற்பட்ட வானதூதரை எனக்கு அனுப்பி வைப்பாரே. அப்படியானால் இவ்வாறு நிகழவேண்டும் என்ற மறைநூல் வாக்குகள் எவ்வாறு நிறைவேறும்? ' என்றார்."

நல்வாழ்வு:
இறைவாக்கு நிறைவேற 
இறைமகனே வந்தார்;
நிறைவாழ்வு நாமடைய 
நேர்வழியைத் தந்தார்.
குறை நீங்க விரும்பிடுவோர்
கிறித்துவுக்குள் வருவார்.
மறைவாக்கின் வெளிச்சத்தில் 
மகிழ்ந்தன்பு தருவார்!
ஆமென்.
LikeLike · 

ஏழையை நினைப்பீரே!

என்னிறக் கட்சிகள் வந்தாலும்,
இந்தியர் இவரென எண்ணவில்லை.
அன்னியர் என்று ஒதுக்காத
ஆண்டவா, இவரை மீட்பீரே!

சென்னிறக் குருதி சிந்துமிவர்,
சீக்கிரம் உயிர் வாழ்வடைவதற்கு,
பொன்னிற நெஞ்சு கொண்டோரே,
புவியில் ஏழையை நினைப்பீரே!
-கெர்சோம் செல்லையா.

இடுப்புக்கு கோவணம் இல்லை ;
கையிலே கொடி  -  இதுதான் 
' சு ' தந்திரம் !

 

விடுதலை நாள் வாழ்த்து

இந்திய விடுதலை நாள் வாழ்த்து:

வீடும் குடும்பமும் போதுமென்று
விரும்பிப் பதுங்கும் இந்தியரே,
நாடும் இனமும் வாழ்ந்தால்தானே,
நமக்கு உயர்வு அறிவீரே!
ஓடும் வாழ்வின் உண்மையறிந்து
ஒருவரையொருவர் மதிப்பீரே.
கேடும் துன்பும் கிட்டவராது;
கிறித்து அருளில் மகிழ்வீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.

இந்திய விடுதலை நாள் வாழ்த்து:

வீடும் குடும்பமும் போதுமென்று 
விரும்பிப் பதுங்கும் இந்தியரே,
நாடும் இனமும் வாழ்ந்தால்தானே,
நமக்கு உயர்வு அறிவீரே!
ஓடும் வாழ்வின் உண்மையறிந்து 
ஒருவரையொருவர் மதிப்பீரே.
கேடும் துன்பும் கிட்டவராது;
கிறித்து அருளில் மகிழ்வீரே!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.
 

இரங்குவோம்!

ஏங்கும் நெஞ்சம் இருக்குமிடத்தில்
இரக்கம் பொழிவோம், என் நண்பா.
வாங்கும் நன்மை வழங்குமிடத்தில்
வறுமை ஒழியும், இது என் பா!
-கெர்சோம் செல்லையா.

வாளா, இல்லை வாழ்வா?

 

நல்வாழ்த்து:
எதிர்ப்பவர் எவராய் இருந்தாலும்
இறைவன் இருக்கக் கவலையில்லை!
மதிப்பவர் சிலராய் இருந்தாலும்
மகிழ்ந்துரைப்போம் அவர் சொல்லை!

நல்வாக்கு:
மத்தேயு 26:51-52.
“உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ‘ உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்.”

நல்வாழ்வு:
வாள் எடுத்துக் கொன்றவர்கள்
வாளால்தான் வீழ்ந்தார்கள்.
தோள் கொடுத்து நின்றவர்கள்
துன்பத்திலும் உயர்ந்தார்கள்.

நாள் முழுதும் கேட்பவர்கள்
நம்புகையில் வாழ்வார்கள்.
தாள் பணிந்து வேண்டுகிறேன்;
தமிழர்களே உணருங்கள்!
ஆமென்.

வாளா, இல்லை வாழ்வா? 

நல்வாழ்த்து:
எதிர்ப்பவர் எவராய் இருந்தாலும்
இறைவன் இருக்கக் கவலையில்லை! 
மதிப்பவர் சிலராய் இருந்தாலும் 
மகிழ்ந்துரைப்போம் அவர் சொல்லை!

நல்வாக்கு:
மத்தேயு 26:51-52.
"உடனே இயேசுவோடு இருந்தவருள் ஒருவர் தமது கையை நீட்டி வாளை உருவித் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய காதைத் துண்டித்தார். அப்பொழுது இயேசு அவரிடம், ' உனது வாளை அதன் உறையில் திரும்பப் போடு. ஏனெனில், வாளை எடுப்போர் அனைவரும் வாளால் அழிந்து போவர்."

நல்வாழ்வு:
வாள் எடுத்துக் கொன்றவர்கள்  
வாளால்தான் வீழ்ந்தார்கள்.
தோள் கொடுத்து நின்றவர்கள் 
துன்பத்திலும் உயர்ந்தார்கள்.

நாள் முழுதும் கேட்பவர்கள் 
நம்புகையில் வாழ்வார்கள்.
தாள் பணிந்து வேண்டுகிறேன்;
தமிழர்களே உணருங்கள்!
ஆமென்.
LikeLike · 

இன்றைய இராக்

இப்படிக் கொல்ல எவர் சொன்னாலும்,
அப்படிச் சொல்லும் இறை வேண்டாம்.
எப்படி அன்பை எவர் கொடுத்தாலும்,
தப்பாதவருள் இறை உண்டாம்!
-கெர்சோம் செல்லையா.
 We need to pray for all those who are facing religious persecution in Iraq.
Ravikumar Stephen Ph D's photo.
Ravikumar Stephen Ph D's photo.
Ravikumar Stephen Ph D's photo.
Ravikumar Stephen Ph D's photo.
Ravikumar Stephen Ph D's photo.

நெஞ்சே கேள்!

நல்வாழ்த்து:
பித்தம் பிடித்து நான் எழுதவில்லை;
பிழைப்பிற்கென்றும் புகழவில்லை.
நித்தமும் உரைப்பது என் கடமை.
நெஞ்சே, புகழ்வாய் உன் இறையை!நல்வாக்கு:மத்தேயு 26:48-50.
“அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், ‘ நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ‘ என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, ‘ ரபி வாழ்க ‘ எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், ‘ தோழா, எதற்காக வந்தாய்? ‘ என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்.”

நல்வாழ்வு:
காட்டிக் கொடுக்கும் கயவனையும்
கனிந்து தோழன் என்றாரே.
கூட்டில் குதிக்கும் குருவியெனக்
கொதிக்கும் எனையும் காண்பாரே.
நாட்டின் நடப்பு பார்க்கையிலே
நல்லவர் வடிவில் யூதாசே.
கேட்டின் மக்கள் கெட்டொழிவார்;
கிறித்து போன்று இரு நெஞ்சே!
ஆமென்.

Photo: நெஞ்சே கேள்!<br />
நல்வாழ்த்து:<br />
பித்தம் பிடித்து நான் எழுதவில்லை;<br />
பிழைப்பிற்கென்றும் புகழவில்லை.<br />
நித்தமும் உரைப்பது என் கடமை.<br />
நெஞ்சே, புகழ்வாய் உன் இறையை!</p>
<p>நல்வாக்கு:மத்தேயு 26:48-50.<br />
"அவரைக் காட்டிக்கொடுக்க இருந்தவன், ' நான் ஒருவரை முத்தமிடுவேன். அவர்தாம் இயேசு; அவரைப் பிடித்துக்கொள்ளுங்கள் ' என்று அவர்களுக்கு அடையாளம் சொல்லியிருந்தான். அவன் நேராக இயேசுவிடம் சென்று, ' ரபி வாழ்க ' எனக் கூறிக்கொண்டே அவரை முத்தமிட்டான். இயேசு அவனிடம், ' தோழா, எதற்காக வந்தாய்? ' என்று கேட்டார். அப்பொழுது அவர்கள் இயேசுவை அணுகி, அவரைப் பற்றிப்பிடித்துக் கைதுசெய்தனர்."</p>
<p>நல்வாழ்வு:<br />
காட்டிக் கொடுக்கும் கயவனையும்<br />
கனிந்து தோழன் என்றாரே.<br />
கூட்டில் குதிக்கும் குருவியெனக்<br />
கொதிக்கும் எனையும் காண்பாரே.<br />
நாட்டின் நடப்பு பார்க்கையிலே<br />
நல்லவர் வடிவில் யூதாசே.<br />
கேட்டின் மக்கள் கெட்டோழிவார்;<br />
கிறித்து போன்று இரு நெஞ்சே!<br />
ஆமென்.

நிரப்பும் ஆண்டவரே!

நல்வாழ்த்து:
அதிசய வாக்கால் அருளைப் பொழியும்
அன்பு இறையே வாழ்த்துகிறேன்.
புதியனவற்றால் என்னை நிரப்பும்
புனிதா உம்மைப் போற்றுகிறேன்!

நல்வாக்கு:
மத்தேயு 26:47
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்:

“இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது.”

நல்வாழ்வு:
காசிற்காக எதையும் செய்யும்
கயவர் இன்றும் வருகின்றார்.
கத்தி, தடியைக் கையில் வைத்து,
கண்ணீர் ஊற்றித் தருகின்றார்.

பேசிச் செல்லும் உறவுகளாக
பேய் பிடித்தோர் இருக்கின்றார்.
பிழையுள் நானும் விழாதிருக்க,
பெரியவர் இயேசு பிரிக்கின்றார்!
ஆமென்.

Photo: நல்வாழ்த்து:

அதிசய வாக்கால் அருளைப் பொழியும் 
அன்பு இறையே வாழ்த்துகிறேன்.
புதியனவற்றால் என்னை நிரப்பும்
புனிதா உம்மைப் போற்றுகிறேன்!

நல்வாக்கு:
மத்தேயு 26:47
இயேசுவைக் காட்டிக் கொடுத்தலும் கைது செய்தலும்:

"இயேசு தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது பன்னிருவருள் ஒருவனாகிய யூதாசு அங்கு வந்தான். அவனோடு குருக்களும் மக்களின் மூப்பர்களும் அனுப்பிய பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது."

நல்வாழ்வு:
காசிற்காக எதையும் செய்யும் 
கயவர் இன்றும் வருகின்றார்.
கத்தி, தடியைக் கையில் வைத்து,
கண்ணீர் ஊற்றித் தருகின்றார்.

பேசிச் செல்லும் உறவுகளாக 
பேய் பிடித்தோர் இருக்கின்றார்.
பிழையுள் நானும் விழாதிருக்க,
பெரியவர் இயேசு பிரிக்கின்றார்!
ஆமென்.