எங்கும் தீது சூழ்ந்திருந்தாலும்,

யாவரும் அடிமையாயில்லை.

அங்கும் இங்கும் சிலரிருப்பார்;

அவரும் கெடுப்பவராயில்லை.

தங்கள் நிலையை அவருணர்வார்;

தம்மைத் தாழ்த்தி வேண்டுவார்.

இங்கே இறையும் இறங்கி வருவார்;

இனிதாய் வாழத் தூண்டுவார்!

(தொடக்க நூல் 4:25-26)

No photo description available.