தூய்மையாவோம்!

தூய்மையாவோம்!

இறை மொழி: யோவான் 17:17. 

  1. தூயவர் இறையிடம் வந்தால்தானே,

தூய்மையும் அழுக்கும் பிரித்தறிவார். 

வாய்மை எதுவெனக் கற்றால்தானே,

வாழ்ந்து நமக்கும் பரிந்துரைப்பார்.

தீயவை விட்டு, திருந்த விரும்பின்,

தெய்வ வாக்கினைக் கற்கப்பார். 

மாயை விலகும், மயக்கம் தெளியும். 

மறைநூல் படியே நிற்போர் யார்?


ஆமென். 


-கெர்சோம் செல்லையா.