கிறித்தவ தலைவர்களே!
இறை மொழி: யோவான் 17: 18-19.
இறை வழி:
தலைவர் தூய்மையின் இருப்பிடமாயின்,
தொண்டரும் தூய்மை நாடிடுவார்.
அலைகிற அவரும் பெருச்சாளியாயின்,
அடியரும் அவ்வழி ஓடிடுவார்.
நிலைமை தெரிந்த இறைமகன் அன்று,
நேர்மை ஆக்கிட வேண்டுகிறார்.
விலைபோகாத தலைவர்தான் தேவை.
வேண்ட, இயேசு தூண்டுகிறார்!
ஆமென்.
-கெர்சோம் செல்லையா.