கிறித்தவ தலைவர்களே!

கிறித்தவ தலைவர்களே!

இறை மொழி: யோவான் 17: 18-19.

இறை வழி:

தலைவர் தூய்மையின் இருப்பிடமாயின்,
தொண்டரும் தூய்மை நாடிடுவார்.
அலைகிற அவரும் பெருச்சாளியாயின்,
அடியரும் அவ்வழி ஓடிடுவார்.
நிலைமை  தெரிந்த இறைமகன் அன்று,
நேர்மை ஆக்கிட  வேண்டுகிறார்.
விலைபோகாத  தலைவர்தான் தேவை.
வேண்ட, இயேசு தூண்டுகிறார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.