விடாய்த்தவர் கேட்டார்!

வேட்கை!

இறை மொழி: யோவான் 19: 28-29.

28. அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து, வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார்.

29. காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது; அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள்.

இறை வழி:

உள்ளின் வேட்கை நிறைவேற்றும்

உன்னதர் திட்டம் முடிக்கையில்,

கள்வர் நடுவில் அவர் தொங்கும்,

கடைசி நேரம் நீர் கேட்டார்.

வெள்ளம் போன்று செந்நீரும்

வெகுமதி என்று வடிக்கையில்,

எள்ளிச் சிரிக்கிற இழிஞரிடம்,

ஏங்கி, இயேசு நீர் கேட்டார்!

ஆமென்.

May be an image of text that says 'to fulfill the Scripture He said... FTHIRST John John19:28 19:28 HIRST'