முடித்தார்!

முடித்தார்!

இறை மொழி: யோவா 19:30.

30. இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, தலையைச் சாய்த்து, ஆவியை ஒப்புக்கொடுத்தார்.

இறை வழி:

மூன்று பதினொரு ஆண்டுகள் வாழ்ந்து,

மும்மையின் நடுவர் முடிக்கிறார்.

தோன்றிய நாள் முதல் தொடாதிருந்து,

தொலையாத் தீவினை முடிக்கிறார்.

ஆன்றவர் அறிவார், அருட் பயன் பெறுவார்;

ஆண்டவர் திருப்பணி முடிக்கிறார்.

சான்றினைக் கொண்டோர் தொடர்கிறார்;

சாகா வாழ்வு பிடிக்கிறார்!

ஆமென்.

May be an image of text