யோவான் 16:9-11.

இறை வாழ்வு:

என்னறிவில் நான் பார்க்கிற நேர்மை
எப்படி முழுமை வைத்திருக்கும்?
முன்னறிவில்லாச் செயலின் தீமை,
முடிவு வரையில் தைத்திருக்கும்.
நன்மைக் கெதிரே நிற்பின் தண்டனை,
நாட்கணக்காகக் காத்திருக்கும்.
இன்னிலை மாற்றுபவரைக் கண்டேன்;
இயேசுவால் மீட்பு பூத்திருக்கும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.