உண்மை பேசுவோம்!

உண்மையின் ஆவியர்!

இறைவாக்கு: யோவான் 16:12-13.

12. இன்னும் அநேகங்காரியங்களை நான் உங்களுக்குச் சொல்லவேண்டியதாயிருக்கிறது, அவைகளை நீங்கள் இப்பொழுது தாங்கமாட்டீர்கள்.

13. சத்திய ஆவியாகிய அவர் வரும்போது, சகல சத்தியத்திற்குள்ளும் உங்களை நடத்துவார்; அவர் தம்முடைய சுயமாய்ப் பேசாமல், தாம் கேள்விப்பட்டவைகள் யாவையுஞ்சொல்லி, வரப்போகிற காரியங்களை உங்களுக்கு அறிவிப்பார்.

இறை வாழ்வு:

ஆவியர் பொழியும் அருள் மெய்யில்,
அகம்புறம் நனையும் கிறித்தவர்கள்,
பாவியராய் அன்று இருந்தது போல்,
பச்சைப் பொய்யின்று பேசுவதேன்?
மூவராய்த் தோன்றும் மும்மையரின்,
முதற்கனி அன்பும் பறித்தவர்கள்,
தாவியே அன்று உயிர் ஈந்த,
தலைவனை வெளியே வீசுவதேன்?

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.