ஆவியார்!

உணர்த்தும் துணையாளர்!
இறை மொழி: யோவான் 16:7-8.

7. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்லுகிறேன்; நான் போகிறது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கும்; நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார்; நான் போவேனேயாகில் அவரை உங்களிடத்திற்கு அனுப்புவேன்.

8. அவர் வந்து, பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக்குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார்.

இறை வழி:

செய்யும் செயலில் நேர்மை உண்டோ?

செயலின் முடிவே தீர்ப்பாகும்.

உய்யும் எண்ணம் உள்ளில் உண்டோ?

உண்மை வந்தால் சேர்ப்பாகும். 

பொய்யா அருள் மழை ஆவியர் உண்டோ?

புகலிடம் இழுக்கும் ஈர்ப்பாகும். 

அய்யா என நாம்  செல்வது உண்டோ?

அன்பே இறையின் வார்ப்பாகும்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.