யோவான் 16:29-30.

இறையிலிருந்து வந்தவர்!

இறையிலிருந்து வந்தவர்!

இறை மொழி: யோவான் 16:29-30. 

29. அவருடைய சீஷர்கள் அவரை நோக்கி: இதோ, இப்பொழுது நீர் உவமையாய்ப் பேசாமல், வெளிப்படையாய்ப் பேசுகிறீர்.

30. நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர் என்றும், ஒருவன் உம்மை வினாவவேண்டுவதில்லையென்றும், இப்பொழுது அறிந்திருக்கிறோம்; இதினாலே நீர் தேவனிடத்திலிருந்து வந்தீரென்று விசுவாசிக்கிறோம் என்றார்கள்.

இறை வழி:

தந்தையிலிருந்து வந்தார் யாவரும் மைந்தர்.
தவறோ சரியோ, வாழ்கிறார் கண் முன்னர்.
வந்தார் கூட்டத்தில் இயேசு இறை மைந்தர்.
வாக்காய் வாழ்ந்த அவரரோ தூய பொன்னர்.
முந்தைய நிகழ்வை அறிந்தவர் மண் மைந்தர்.
முரண் கருத்தே  வரும் அவர் பின்னர். 
பிந்தைய காலம் காண்பவரோ இறை மைந்தர். 
பேரரசிணைக்கும் அவரே, நம் மன்னர்!
ஆமென். 
கெர்சோம் செல்லையா. 

கெர்சோம் செல்லையா.