நிலை வாழ்வு!

நிலைவாழ்வு!

என்றும் நிலைத்த இறையருளாலே
என் நிலையாமையில் அஞ்சேனே.
அன்பின் உள் எனை நடத்துவதாலே,
அடியன் அளவில் மிஞ்சேனே.
நின்று நிலைக்கும் அவர் வாக்காலே,
நீடிய வாழ்வில் இணைவேனே.
நன்றாய் நடத்தி நல்லீவருளும்,
நல்லிறையருகில் அணைவேனே!

கெர்சோம் செல்லையா.