துன்புறும் இவ்வுலகில்!

துன்புற்ற இவ்வுலகில்!

இறை மொழி: யோவான் 16: 33.

33. என்னிடத்தில் உங்களுக்குச் சமாதானம் உண்டாயிருக்கும் பொருட்டு இவைகளை உங்களுக்குச் சொன்னேன். உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.

இறை வழி :

துன்புற்ற இவ்வுலகில், துணையாகும் இறையே,

துணிவும் உன் ஈவே, தொடர்ந்தெனை நிறையே.

இன்புற்று வாழுங்கால் எண்ணுவேன் குறையே;

யானும் உனைப் பார்த்து, உதவுவேன் முறையே.

அன்பற்ற மனிதர்களாய் வாழ்பவர்கள் கறையே.

அறிந்தும் நடவார்கள், அடைவார்கள் அறையே.

தென்பட்ட மக்களுக்குத் தேவை நல்லுரையே.

தெரிவிக்க அடிக்கிறேன், இறையரசு பறையே!

ஆமென்.

கெர்சோம் செல்லையா.

May be an image of boat, sail and text that says 'These things I have spoken unto you, that in me ye might have peace. In the world ye shall have tribulation: the but be of good cheer; I have overcome the world. John 16:33'

Like

Comment

Share