துயரம் மகிழ்ச்சியாக்கும்!

உங்கள் துயரம் மகிழ்ச்சியாக மாறும்!

இறை மொழி: யோவான் 16:19-20.

19. அதைக்குறித்துத் தம்மிடத்தில் கேட்கும்படி அவர்கள் விரும்புகிறதை இயேசு அறிந்து, அவர்களை நோக்கி: கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்று நான் சொன்னதைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே விசாரிக்கிறீர்களோ?

20. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: நீங்கள் அழுது புலம்புவீர்கள், உலகமோ சந்தோஷப்படும்; நீங்கள் துக்கப்படுவீர்கள், ஆனாலும் உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும்.

இறை வழி:

துயரத்தை மகிழ்ச்சியாக்கும்
தூயரே துணையிருக்க,
அயர்விலும் அஞ்சிடேன் நான்;
அவரே எனக்கு எல்லாம்.
இயற்கையைப் படைத்து ஆளும்,
இறைவனே எனையணைக்க,
புயல்களும் அடங்கி நிற்கும்;
போதுமே அவர் சொல்லாம்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.