காணாதிருக்கும் காலம்!

காணாதிருக்கும் காலம்!

இறைமொழி: யோவான் 16: 16-18.

  1. நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால் கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றார்.
  2. அப்பொழுது அவருடைய சீஷரில் சிலர்: நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், கொஞ்சக்காலத்திலே என்னைக் காணாதிருப்பீர்கள் என்றும், மறுபடியும் கொஞ்சக்காலத்திலே என்னைக் காண்பீர்கள் என்றும் அவர் நம்முடனே சொல்லுகிறதின் கருத்தென்ன என்று தங்களுக்குள்ளே பேசிக்கொண்டதுமன்றி:
  3. கொஞ்சக்காலம் என்கிறாரே, இதென்ன? அவர் சொல்லுகிறது இன்னதென்று நமக்கு விளங்கவில்லையே என்றார்கள்.

இறை வழி:

காணாதிருக்கும் காலம் என்றால்
கண்ணீர் வடிக்கும் நேரம்.
வீணாய் அழுது, விதி என்னாமல்,
வேண்டிப் பெறுவோம் வீரம்.
பேணாதிருக்க இறை மறப்பாரோ?
பிழைகள் ஆய்வோம் வாரும்.
கோணாதிருக்கும் வழி நடந்தால்,
குறையும் பொழுது, பாரும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.