வலியும் வாழ்வும்!

வலியும் வாழ்வும்!

இறை மொழி: யோவான் 16:21-22. 

21. ஸ்திரீயானவளுக்குப் பிரசவகாலம் வந்திருக்கும்போது அவள் துக்கமடைகிறாள்; பிள்ளைபெற்றவுடனே ஒரு மனுஷன் உலகத்தில் பிறந்தானென்கிற சந்தோஷத்தினால் அப்புறம் உபத்திரவத்தை நினையாள்.

22. அதுபோல நீங்களும் இப்பொழுது துக்கமடைந்திருக்கிறீர்கள். நான் மறுபடியும் உங்களைக் காண்பேன், அப்பொழுது உங்கள் இருதயம் சந்தோஷப்படும், உங்கள் சந்தோஷத்தை ஒருவனும் உங்களிடத்திலிருந்து எடுத்துப்போடமாட்டான்.

இறை வழி:

பேற்றின் நாளில் பெறுபவள் துடிப்பாள்;
பெற்ற பின்போ மகிழ்வை பிடிப்பாள்.
கூற்றின் பொருளை உணரப் படிப்பாய்.
கொடுமை எனினும் விழுங்கக் கடிப்பாய் .
தூற்றும் பழிச்சொல் கசக்கும் என்பார்.
தூயரோ அதனை விரும்பித் தின்பார்.
மாற்றும் இறையின் விருந்து உண்பார்,
மருந்தும் உண்டார், நீ முன் பார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.