4. தீதின் வளர்ச்சி!
சிறு விதையாகத் தொடங்கிய தீது,
சிகரம் தேடும் மரமாய் வளர்ந்து,
பெரு நிலம் முழுதும் படர்ந்து பரந்து,
பிள்ளைக்கனியை நஞ்சாய்த் தருதே.
குறுமதிகொண்ட நெஞ்சின் சூது,
கொடுமைகளுக்கு ஊற்றாய் இருந்து,
தெரு முனை நாடு நகரம் இணைத்து,
தெளிவு அழிக்கும் ஆறாய் வருதே!
(தொடக்க நூல் 4).