உடை உரிந்தார்!

உடை உரிந்தார்!

இறை மொழி: யோவான் 19:23-24.

23. போர்ச்சேவகர் இயேசுவைச் சிலுவையில் அறைந்தபின்பு, அவருடைய வஸ்திரங்களை எடுத்து, ஒவ்வொரு சேவகனுக்கு ஒவ்வொரு பங்காக நாலு பங்காக்கினார்கள்; அங்கியையும் எடுத்தார்கள், அந்த அங்கி, தையலில்லாமல் மேலே தொடங்கி முழுவதும் நெய்யப்பட்டதாயிருந்தது.

24. அவர்கள்: இதை நாம் கிழியாமல், யாருக்கு வருமோ என்று இதைக்குறித்துச் சீட்டுப்போடுவோம் என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள். என் வஸ்திரங்களைத் தங்களுக்குள்ளே பங்கிட்டு, என் உடையின்மேல் சீட்டுப்போட்டார்கள் என்கிற வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாகப் போர்ச்சேவகர் இப்படிச் செய்தார்கள்.

இறை வழி:

இருந்த சொத்து உடுத்திய உடைகள்;

இயேசுவினின்று உரிந்தார்கள்.

தெரிந்த மானம் மறைக்கா படைகள்,

திருடி, பங்கிடத் தெரிந்தார்கள்.

வருந்தி அழுது உடுத்தும் கைகள்,

வராதிருந்ததில் வியப்பில்லை.

திருந்தினால் தான் திறக்கும் பைகள்;

தேவை கனிவு, கயப்பில்லை!

ஆமென்.

May be an image of 1 person