குதிரையா? கழுதையா?

குதிரையா? கழுதையா?

இறைவாக்கு: யோவான் 12:14-16.14.

அல்லாமலும்: சீயோன் குமாரத்தியே, பயப்படாதே, உன் ராஜா கழுதைக்குட்டியின்மேல் ஏறிவருகிறார் என்று எழுதியிருக்கிற பிரகாரமாக,15. இயேசு ஒரு கழுதைக்குட்டியைக் கண்டு அதின்மேல் ஏறிப்போனார்.16. இவைகளை அவருடைய சீஷர்கள் துவக்கத்திலே அறியவில்லை. இயேசு மகிமையடைந்த பின்பு, இப்படி அவரைக்குறித்து எழுதியிருக்கிறதையும், தாங்கள் இப்படி அவருக்குச் செய்ததையும் நினைவுகூர்ந்தார்கள்.

இறைவாழ்வு:

கழுதையும் குதிரையும் வந்து நின்றால்,

கழுதையை எவர்தான் விரும்புவார்?

கொழுமையும் எளிமையும் தேர்வு சென்றால்,

கொழுமையின் பக்கமே திரும்புவார்.

அழுகுரல் அழிக்கும் அமைதிக்கென்றால்,

அறிஞர் எதைத்தான் விரும்புவார்?

எளிமையின் வடிவம் எடுத்த இறைபோல்,

இனிய கழுதை பின் திரும்புவார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.