ஓசன்னா!

இறைவாக்கு: யோவான் 12:12-13.

இறை வாழ்வு:


இன்றே மீட்க வேண்டும் என்று 

ஏங்கும் எங்கள் குரல் கேளும்.

அன்றேழையர் விளித்தது போன்று,

அழைப்பவர் பட்டியல் நீளும்.

ஒன்றோடொன்று மோதிக் கொண்டு,

ஊரை அழிக்கிறார் நாளும்.

என்றோ ஒரு நாள் என்று அல்ல;


இன்றே மீட்டு எமை ஆளும்! 

ஆமென். 


-கெர்சோம் செல்லையா.