ஆவியார்!

ஆண்டவரும் ஆவியாரும்!

இறை மொழி: யோவான் 16:14-15.  14.
அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பதினால் என்னை மகிமைப்படுத்துவார்.

15. பிதாவினுடையவைகள் யாவும் என்னுடையவைகள்; அதினாலே அவர் என்னுடையதில் எடுத்து உங்களுக்கு அறிவிப்பார் என்றேன்.  

இறை வழி:

கடந்து உள்ளில் இருக்கும் இறையை,
காட்டித் தருபவர் இறை ஆவியார்.
நடந்து நன்மை வழங்கிய மகனை,
நாளும் உரைப்பவர் இறை ஆவியார்.
கிடந்து அழுகிற மனிதரைத் தூக்கி,
கிறித்துவில் இணைப்பவர் ஆவியார்.
தொடர்ந்து அவரைப் பற்றிடுவார்க்கு,   
துணையாய் இருப்பவர் ஆவியார்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.