இன்னொரு வறட்சி காண்கையில்,
தப்பாய்ப் பேசித் தன் பற்றிழந்து,
அப்படி மோசே ஆற்றிய தவற்றால்,
அடையும் கானான் இழக்கவே,
ஒப்பரு இறையும், உள்ளம் கண்டு,
ஊழியர் கை பிடிக்கிறார்!
(எண்ணிக்கை 20:1-13 & இணைச்சட்டம் 34)
The Truth Will Make You Free
ஏசாயா பதினான்கு எடுத்துரைக்கும் பேரறிவு,
இன்றும் பேசுவதால் எழுதுகிறேன்.
ஓசையாய் ஒரு கூட்டம் ஓயாது பொய்யுரைத்து,
உண்மை பூசுவதால் எழுதுகிறேன்.
பேசாமல் இருப்போரின் பிழைகள் திரும்பி வந்து,
பிண வாடை வீசுவதால் எழுதுகிறேன்.
மாசான கருத்தியலில் மாட்டியவர் மீட்படைந்து,
மறை மணம் வீசிடவே எழுதுகிறேன்.
-கெர்சோம் செல்லையா.