தன்னிலை விளக்கும் பாடல்கள் தந்தும்

தாவிது இறையைப் புகழ்கிறார்.

முன்னறிவோடு இறை வாக்குரைக்கும்,

முழுமைப் பற்றிலும் திகழ்கிறார்.

இந்நிலம் மீட்க வருபவர் ஒருவர்,

இவர் வழித்தோன்றல் என்கிறார்.

சொன்னவை பாடி, சுவைப்பவர் கோடி;

சொந்தமாம் பேறும் உண்கிறார்!

(தாவிதின் திருப்பாடல்கள்)

May be an image of 1 person and text

ஆயனாயிருந்து அரசனாய்ச் சிறந்தும்,

அவரிலும் தவறு இலாமலில்லை.

நேயனாய்த் திருப்பாடல்கள் வரைந்தும்,

நேர்மைக் குறை தொலையவில்லை.

சேயனாய்த் தாழ்ந்து, திருந்தும் வரைக்கும்,

செய்தவை விளையாதிருப்பதில்லை.

தூயனாய் மாற்றும் தெய்வ உரைக்கும்,

திருந்தார் வாழார், மறுப்பதில்லை!

(2 சாமுவேல் 11-12:25)

May be an illustration of 2 people

தடைக் கற்களை உடைத்துப் போடும்

தாவிது, ஈசயின் புதல்வன்.

கடைக்குட்டியாகப் பிறந்திருந்தாலும்,

கடவுள் கணக்கில் முதல்வன்.

இடைப்பட்ட நாளில், துன்புகள் கண்டும்,

இறைப் புகழ் பாடிய புலவன்.

கிடைத்த அருளை வளர்த்தி,வழங்கும்,

கேட்போர் போற்றும் தலைவன்!

(1 & 2 சாமுவேல்)

May be an image of 1 person and harp

நாட்டை நினைத்து நன்மை செய்யும்

நல்ல தலைவர் நாடுகிறோம்.

கோட்டை விட்டச் சிலரைக் கண்டும்,

குறுகி நெஞ்சம் வாடுகிறோம்.

ஏட்டை எடுத்து இறை சொல் கேட்டு,

எவரும் உண்டோ, தேடிடுவோம்.

ஆட்டை மேய்த்த தாவிது கண்டு,

அவரது புகழ் பாடிடுவோம்!

(2 சாமுவேல் 2-5:-5).

May be an image of 1 person, flute and harp

இருபது கடவா அகவை கொண்டும்,

இவரில் இருந்த இறைப் பற்று,

சிறுமை செய்வதை அழிக்கத் தூண்டும்,

செய்திச் சுரங்க அருள் ஊற்று.

அறுபது எழுபது என்றெனத் தாண்டும்,

அகவையுள்ளோர் இது கற்று,

வறுமை சிறுமை ஒழித்திட வேண்டும்,

வாழும் திரு மறைக் கூற்று!

(1 சாமுவேல் 16-18))

May be an image of 1 person

தொடங்கிய அரசு முடங்கிப் போன,

தோல்வி நிறைந்த அந்நாளில்

இடையர் ஒருவர் எழுந்து வந்தார்

இவர்தான் எளிய தாவீது.

படைவலி அல்ல, பற்றில் காண,

பாடித் திரிந்த அவர் காலில்

கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.

கேட்பீர் அரிய மா தூது!

(1& 2 சாமுவேல்).

May be a graphic

தொடங்கிய அரசு முடங்கிப் போன,

தோல்வி நிறைந்த அந்நாளில்

இடையர் ஒருவர் எழுந்து வந்தார்

இவர்தான் எளிய தாவீது.

படைவலி அல்ல, பற்றில் காண,

பாடித் திரிந்த அவர் காலில்

கிடக்கும் ஆட்சி கடவுள் தந்தார்.

கேட்பீர் அரிய மா தூது!

(1& 2 சாமுவேல்).

May be a graphic

கொல்லும் பலிகள் கொடுப்பது நன்றா?

கீழ்ப்படிந்து நடப்பது நன்றா?

வெல்லும் வீரர் புகழ்தல் நன்றா?

வெறியில்லாத இரக்கம் நன்றா?

சொல்லும் இறையின் வாக்கு நன்றா?

சொந்தமான மடமை நன்றா?

இல்லை வேறு இனிமை இல்லை;

இறையே நமக்கு என்றும் நன்று!

(1 சாமுவேல் 15:22).

May be an illustration of text that says 'Obediance 1 1 SAMUEL 15:22 Sacrifico Sac IS BETTER THAN'

உயர்ந்து நின்ற ஒருவரைத் தேர்ந்து,

உடனடி அரசர் ஆக்குகிறார்.

நயந்து செய்கிற நல்லோர் போன்று,

நடித்து நாள் அவர் போக்குகிறார்.

அயர்ந்து கிடக்கிற இசரயெல்லரை,

அந்த சவுலும் காக்கவில்லை.

ஐயோ, அதுபோல் பலரைக் கண்டோம்.

அவரும் இறை நோக்கவில்லை!

(1 சாமுவேல் 9-31)

May be an image of 2 people

அடுத்த வீட்டையும் அண்டை நாட்டையும்,

அவாப் பெருக்கினில் பார்க்கிறோம்.

எடுத்த எடுப்பிலே,இலாதவை காணவும்,

ஏக்கம் பொறாமை கோர்க்கிறோம்.

தொடுத்து வந்திடும் துயர்கள் தீர்க்கும்,

தெய்வ அரசையோ மறுக்கிறோம்.

கெடுத்து ஆள்வதை அறியாதழியும்,

கீழோர் போற்றியும் சிறுக்கிறோம்!

(1 சாமுவேல் 8:1-22).

May be an image of text that says 'Thep have rejected jectes21e 20e that I should not be kíng over them 1 Samuel 8:7 Knowing Jesus Jesus.com'

மன்னர்கள் இல்லா அன்றைய நாளில்,

மதிப்பில் சிலபேர் சிறந்தனர்.

தன்னிகர் இல்லாத் தலைவர்களாகி

தகுந்த முடிவும் எடுத்தனர்.

என்றிருந்தாலும் இவர்களை உணர்த்த,

இறை வாக்கினரும் பிறந்தனர்.

அன்னாள் மகனாம் சாமுயெலுக்கு,

அவரில் முதலிடம் கொடுத்தனர்!

(1 சாமுவேல்)

May be art of 1 person