கல்லில் எழுதி கட்டளை கொடுத்தார்;

கடவுட் கட்டளை ஆய்வோமா?

சொல்லில் நான்கு இறையுறவென்றார்;

சொற்படிப் பணிய, செய்வோமா?

நல்லுறவில் நாம் பிறருடன் வாழ,

நான்குடன் இரண்டு அவர் த்ந்தார்.

எல்லையில்லா இறை பேரன்பை,

யாவரும் அணிய, பத்தீந்தார்!

(விடுதலைப் பயணம் 20:1-17).

May be an image of 1 person and text that says 'หวคม பத்து கட்டளைகள் என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம். 2. யாதொரு விக்கிரகத்தையாகிலும் நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். 3. உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக. 4. ஒய்வராளைப் பரிசுத்தமாய் ஆசரிக்க நினைப்பாயாக. 5. உன் தகப்பனையும் உன் தாயையும் கனம்பண்னுவாயாக. 6. கொலை செய்யாதிருப்பாயாக. 7. விபசாரம் செய்யாதிருப்பாயாக. 8. களவு செய்யாதிருப்பாயாக. 9. பிறனுக்கு விரோதமாகப் பொய்ச்சாட்சி Dis சொல்லாதிருப்பாயாக. 0. பிறனுக்குள்ள யாதொன்றையும் இச்சியாதிருப்பாயாக. யாத்திராகமம் 20 3-17. BIBLE WORDS'