முடிவை முதற்கண் எடுத்துவிட்டு….

முடிவை முதற்கண் எடுத்துவிட்டு….
நற்செய்தி மாலை:மாற்கு 14:53-55.
“அவர்கள் இயேசுவைத் தலைமைக் குருவிடம் கூட்டிச் சென்றார்கள். எல்லாத் தலைமைக் குருக்களும் மூப்பர்களும் மறைநூல் அறிஞர்களும் ஒன்று கூடினார்கள். பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். தலைமைக் குருவின் வீட்டு உள்முற்றம் வரை வந்து காவலரோடு உட்கார்ந்து நெருப்பின் அருகே அவர் குளிர்காய்ந்து கொண்டிருந்தார். தலைமைக் குருக்களும் தலைமைச் சங்கத்தார் அனைவரும் இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்க அவருக்கு எதிராகச் சான்று தேடினார்கள். ஆனால் ஒன்றும் கிடைக்கவில்லை.”
நற்செய்தி மலர்:
முடிவை முதற்கண் எடுத்துவிட்டு,
முறையற்று வழக்கைத் தொடங்குகிறார்.
படித்தவர் போர்வையை உடுத்துக்கொண்டு,
பண்பற்றுத் தீமையுள் முடங்குகிறார்.
அடிமைபோல் நிற்கும் எழையரோ,
அதைப் புரியாமலே மடங்குகிறார்.
விடியும் ஒரு நாள் இறையரசு;
வீணாய்ப் போனோர் அடங்கிடுவார்!
ஆமென்.

Image may contain: 5 people

Leave a Reply