உண்மையுரைப்பவரே வெல்வார்!

உண்மையுரைப்பவரே வெல்வார்!
நற்செய்தி மாலை: மாற்கு 14:56-59.
“பலர் அவருக்கு எதிராகப் பொய்ச்சான்று சொன்னார்கள். ஆனால் அச்சான்றுகள் ஒன்றுக்கொன்று முரண்பட்டிருந்தன. சிலர் எழுந்து, ‘ மனித கையால் கட்டப்பட்ட இந்தத் திருக்கோவிலை இடித்து விட்டுக் கையால் கட்டப்படாத வேறொன்றை மூன்று நாளில் நான் கட்டி எழுப்புவேன் என்று இவன் சொல்லக் கேட்டோம் ‘ என்று அவருக்கு எதிராகப் பொய்ச் சான்று கூறினர். அப்படியும் அவர்களுடைய சான்று ஒத்துவரவில்லை.”

நற்செய்தி மலர்:
வழக்கில் வெற்றி காண்பதற்கு,
வாய்நிறையப் பொய் சொல்வார்.
இழக்கும் மானம் எண்ணாது,
இழிவினிறுதிக்கும் இவர் செல்வார்.
கிழக்கு தொடங்கி மேற்குவரை,
கிறித்தவப்பெயரிலும் பலர் கொல்வார்.
உழக்கு படியாய் மாறாது;
உண்மையுரைப்பவரே வெல்வார்!
ஆமென்.

No automatic alt text available.

Leave a Reply