இறையொளி!
நற்செய்தி: யோவான் 1:10-11
நல்வழி:
எந்த மாந்தரும் ஒளியைப் பெறுவார்;
இறையும் மகனாய் வெளிப்பட்டார்.
இந்த ஒளியைப் பெற்றவர் தருவார்;
எங்கும் ஒளியை பரப்பிட்டார்.
சொந்த உறவோ ஏற்க மறுத்தார்;
சொல்லால் செயலால் தடுத்திட்டார்.
அந்த ஒளியை அடக்குதல் எளிதோ?
ஆதவன் முன்பு அடங்கிட்டார்!
ஆமென்.
-செல்லையா.