ஒளியும், விளக்கும்!

ஒளி வேறு, விளக்கு வேறு!

நற்செய்தி வாக்கு: யோவான்: 1:6-9.

6. தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான்.7. அவன் தன்னால் எல்லாரும் விசுவாசிக்கும்படி அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க சாட்சியாக வந்தான்.8. அவன் அந்த ஒளியல்ல, அந்த ஒளியைக்குறித்துச் சாட்சிகொடுக்க வந்தவனாயிருந்தான்.9. உலகத்திலே வந்து எந்த மனுஷனையும் பிரகாசிப்பிக்கிற ஒளியே அந்த மெய்யான ஒளி.

நல்வழி பாட்டு:

வெளிச்சம் கொடுக்கும் விளக்கானாலும்,

விளக்கும் வெளிச்சமும் வேறாகும்.

ஒளியை வழங்கும் யோவாணுர்ந்து,

உரைக்கும் வாக்கும் பேறாகும்.

தெளிவைப் பெற்ற அடியாரெவரும்,

தெய்வம் வாழ்த்தும் விளக்காகும்.

எளிமை, தாழ்மை, தூய்மை, அன்பு,

இவையே இயேசுவின் ஒளியாகும்!

ஆமென்.

-செல்லையா.

Leave a Reply