இறைவாக்கினருக்கு இங்கே மதிப்பில்லை!

இறைவாக்கினருக்கு இங்கே மதிப்பில்லை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:21-24.
21 அப்பொழுது அவர் அவர்களோடே பேசத்தொடங்கி: உங்கள் காதுகள் கேட்க இந்த வேதவாக்கியம் இன்றையத்தினம் நிறைவேறிற்று என்றார்.
22 எல்லாரும் அவருக்கு நற்சாட்சி கொடுத்து, அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டு: இவன் யோசேப்பின் குமாரன் அல்லவா என்றார்கள்.
23 அவர் அவர்களை நோக்கி: வைத்தியனே, உன்னைத்தானே குணமாக்கிக்கொள் என்கிற பழமொழியைச் சொல்லி, நாங்கள் கேள்விப்பட்டபடி கப்பர்நகூமூரில் உன்னால் செய்யப்பட்ட கிரியைகள் எவைகளோ அவைகளை உன் ஊராகிய இவ்விடத்திலும் செய் என்று நீங்கள் என்னுடன் சொல்லுவீர்கள் என்பது நிச்சயம்.
24 ஆனாலும் தீர்க்கதரிசி ஒருவனும் தன் ஊரிலே அங்கீகரிக்கப்படமாட்டான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

கிறித்துவில் வாழ்வு:
மற்றவர் பார்வையில் சிறப்பைப் பெற்றும்,
மனையோர், ஊரார் மதிக்கவில்லை.
உற்றவர், உறவுகள் உதவிகள் உற்றும்,
ஒருவரைப் பார்க்கவும் விதிக்கவில்லை.
கற்றவர் வந்து ஏற்பார் என்றால்,
காட்சிக்கு விளம்பரம் பதிக்கவில்லை.
பொற்றவம் ஏற்ற உம்மைப் பார்த்தேன்;
பொறுமையில் குருதி கொதிக்கவில்லை!
ஆமென்.

No automatic alt text available.

மறக்கமுடியாத 13-09-1978.

மறக்கமுடியாத 13-09-1978.

நாற்பது ஆண்டுகள் முன்னே,
நம்ப மறுத்து, அலைந்தேன்.
ஏற்பது எல்லாம் இழந்தே,
இறைவன் இன்றி, குலைந்தேன்.
தோற்பது ஏன் என் வாழ்வே?
துயரையே கேட்டு அழுதேன்.
பார்ப்பது யாரெனக் கேட்டார்.
பதில்தர, இயேசுவைத் தொழுதேன்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: 1 person, suit

அருட்பொழிவு எதற்காக?

அருட்பொழிவு எதற்காக?No automatic alt text available.
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:16-20.
 
16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.
 
கிறித்துவில் வாழ்வு:
அருட்பொழிவென்பது எதற்காக?
ஆடிப்பாடி உருள்வதற்கா?
திருப்பிடும் வரங்கள் வீணடித்தால்,
தெய்வ ஆவியர் வருந்தாரா?
இருளில் இருக்கும் ஏழைக்கும்,
ஏங்கித் தவிக்கும் அடிமைக்கும்,
பொருளறியாத கண்ணிற்கும்,
பொழியும் விடுதலை, திருந்தாரா?
ஆமென்.

நன்கு கேட்பாய் இறைச்செய்தி!

நன்கு கேட்பாய் இறைச்செய்தி!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:16-20.
16 தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்.
17 அப்பொழுது ஏசாயா தீர்க்கதரிசியின் புஸ்தகம் அவரிடத்தில் கொடுக்கப்பட்டது. அவர் புஸ்தகத்தை விரித்தபோது:
18 கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்; இருதயம் நருங்குண்டவர்களைக் குணமாக்கவும், சிறைப்பட்டவர்களுக்கு விடுதலையையும், குருடருக்குப் பார்வையையும் பிரசித்தப்படுத்தவும், நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும்,
19 கர்த்தருடைய அநுக்கிரக வருஷத்தைப் பிரசித்தப்படுத்தவும், என்னை அனுப்பினார், என்று எழுதியிருக்கிற இடத்தை அவர் கண்டு,
20 வாசித்து, புஸ்தகத்தைச் சுருட்டி, பணிவிடைக்காரனிடத்தில் கொடுத்து, உட்கார்ந்தார். ஜெபஆலயத்திலுள்ள எல்லாருடைய கண்களும் அவர்மேல் நோக்கமாயிருந்தது.

கிறித்துவில் வாழ்வு:
இன்று வராதா நற்செய்தி?
என்று எங்கும் ஏழையரும்,
கன்று போன்று துள்ளுகிறார்;
கடவுளின் அருளை அள்ளுகிறார்.
நின்று கேட்கும் என் நண்பா,
நீயும் ஆவியில் நிறைவதற்கு,
நன்கு கேட்பாய் இறைச்செய்தி;
நமக்கு அதுதான் நற்செய்தி!
ஆமென்.

Image may contain: 8 people, including Wilson Shankey B, people standing and outdoor
LikeShow More Reactions

முழங்கால் முடக்கி வாழ்த்துகிறார்!

Image may contain: one or more people, people standing and outdoor

முழங்கால் முடக்கி வாழ்த்துகிறார்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:14-15.
14 பின்பு இயேசு ஆவியானவருடைய பலத்தினாலே கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவருடைய கீர்த்தி சுற்றிலும் இருக்கிற தேசமெங்கும் பரம்பிற்று.
15 அவர்களுடைய ஜெபஆலயங்களில் அவர் உபதேசித்து, எல்லாராலும் புகழப்பட்டார்.

கிறித்துவில் வாழ்வு:
பெருந்தொகை வருவாய் வருமேயென்றால்,
பெரியரும், சிறியரும் முன்வருவார்.
இருப்பதை இழக்கும் இறைப்பணியென்றால்,
யார்தான் இயேசு பின்வருவார்?
திருப்பணிக்கென்றே தெய்வ மகனார்,
திக்குகள் எட்டும் நடக்கின்றார்.
அருட்பலி காணும் அந்த நாட்டார்,
அவர்முன் கால்களை முடக்கின்றார்!
ஆமென்.

தலைவர்களே கேளுங்கள்!

தலைவர்களே கேளுங்கள்!

இந்தியர் வாழவே வாழ்வோம்;
ஏழையர் விழுவின் விழுவோம்.
முந்தைய நாள்போல் பிரியோம்;
முரடராய், வெறியராய்த் திரியோம்.
தந்தையாய்ப் பிறரை மதிப்போம்;
தவற்றினை மட்டுமே மிதிப்போம்.
விந்தையாய் உயர உழைப்போம்.
விண்ணின் அருளால் தழைப்போம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: text

அதிசயமானவர்!

அதிசயமானவர்!
கிறித்துவின் வாக்கு: லூக்கா4:9-13.

9 அப்பொழுது அவன் அவரை எருசலேமுக்குக் கொண்டுபோய், தேவாலயத்து உப்பரிகையின்மேல் அவரை நிறுத்தி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இங்கேயிருந்து தாழக்குதியும்.
10 ஏனெனில், உம்மைக் காக்கும்படிக்குத் தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார் என்றும்,
11 உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டுபோவார்கள் என்றும், எழுதியிருக்கிறது என்று சொன்னான்.
12 அதற்கு இயேசு: உன் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பாராதிருப்பாயாக என்று சொல்லியிருக்கிறதே என்றார்.
13 பிசாசானவன் சோதனையெல்லாம் முடிந்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான்.

கிறித்துவில் வாழ்வு:
அதிசயம் என்ற சொல்லிற்கு,
ஆட்சியாளர் இறைமகனார்.
பதிலைக் கேட்கும் வேண்டலுக்குப்
பரிசாய்த் தருகிறார் நிறைமகனார்.
சோதனை ஐயம் கொள்ளாது,
சொந்தம் என்றே நம்பிடுவீர்.
மேதினி அறியா அதிசயத்தை,
மேலும் செய்வார், கும்பிடுவீர்.
ஆமென்.

Image may contain: sky, cloud, twilight, outdoor and nature
LikeShow More Reactions

Comment

விரிப்பவர் விழுமிடம் வலையே!

விரிப்பவர் விழுமிடம் வலையே!

சத்ரியர் செய்வதும் கொலையே;
சூத்திரர் ஆயினும் கொலையே.
பத்திரமாகத் தம்மைக் காக்கும்,
பார்ப்பனர் செய்யினும் கொலையே.
இத்தரைப் புவியின் கொலையே,
ஏழைக்கு மாற்றினாய் நிலையே.
வித்தகராகத் தம்மை எண்ணி,
விரிப்பவர் விழுமிடம் வலையே!

-கெர்சோம் செல்லையா.

No automatic alt text available.
No automatic alt text available.

பித்தர் என்று மனிதர் நினைப்பார்!

பித்தர் என்று மனிதர் நினைப்பார்!

கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:5-8.
5 பின்பு பிசாசு அவரை உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் ஒரு நிமிஷத்திலே அவருக்குக் காண்பித்து:
6 இவைகள் எல்லாவற்றின்மேலுமுள்ள அதிகாரத்தையும் இவைகளின் மகிமையையும் உமக்குத் தருவேன், இவைகள் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; எனக்கு இஷ்டமானவனுக்கு இவைகளைக் கொடுக்கிறேன்.
7 நீர் என்னைப் பணிந்துகொண்டால் எல்லாம் உம்முடையதாகும் என்று சொன்னான்.
8 இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: எனக்குப் பின்னாகப்போ சாத்தானே, உன் தேவனாகிய கர்த்தரைப் பணிந்துகொண்டு, அவர் ஒருவருக்கே ஆராதனைசெய்வாயாக என்று எழுதியிருக்கிறதே என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
பத்து கொடுத்தால் முடியாதென்பார்;
பதினாயிரமெனில் அடிமையாவார்.
சித்துவிளையாடும் அரசியல் அறிஞர்,
சிறுமையிலேதான் கிடக்கின்றாரே!
மொத்தமாகவே அலகை கொடுத்தும்,
முடியாதென்றார் இறையின் மைந்தர்.
பித்தர் என்று மனிதர் நினைப்பார்.
புனிதரோ, நேர்வழி நடக்கின்றாரே!
ஆமென்.

கல்லை உணவாய் மாற்றும் வலிமை!

கல்லை உணவாய் மாற்றும் வலிமை!
கிறித்துவின் வாக்கு: லூக்கா 4:3-4.
3 அப்பொழுது பிசாசு அவரை நோக்கி: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல் அப்பமாகும்படி சொல்லும் என்றான்.
4 அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.

கிறித்துவில் வாழ்வு:
கல்லை உணவாய் மாற்றும் வலிமை,
கடவுளின் மகனில் உண்டெனினும்,
வல்லமை காட்டி, வாழ்த்துகள் வாங்க,
வல்லோன் இயேசு விரும்பவில்லை.
இல்லா வரங்கள் இருப்பதாய்க் கூறும்,
இன்றைய ஊழியர் இதை அறியின்,
பொல்லா அலகை போகவே போவான்.
புரியார் சரியாய்த் திரும்பவில்லை!
ஆமென்.

Image may contain: one or more people, outdoor and nature