ஒவ்வொரு இந்தியரும் உணரட்டும்!

ஒவ்வொரு இந்தியரும் உணரட்டும்!

பஞ்சம் நமக்கு வந்த நாளில்,
பல ஊர் சென்று குடி புகுந்தோம்.
வஞ்சம் இன்றி அவரும் சேர்த்தார்;
வாழும் நிலையில் நாம் உயர்ந்தோம்.
தஞ்சம் தந்த அவரை இன்று,
தாழ்ந்தோர் என்று மிதிக்கின்றோம்.
அஞ்சாதவர்கள் நிமிர்ந்தெழுந்தால்,
அறியோம் நம்நிலை, மதித்திடுவோம்!

-கெர்சோம் செல்லையா.

Image may contain: one or more people, sky and outdoor
LikeShow More Reactions

Comment

Comments
Gershom Chelliah

Write a comment…
 

நீண்ட காலப் பணியை முடித்து!

நீண்ட காலப் பணியை முடித்து!
நற்செய்தி மாலை:மாற்கு 13:24-27.
“அந்நாள்களில் அவ்வேதனைகளுக்குப் பிறகு கதிரவன் இருண்டுவிடும்; நிலா ஒளிகொடாது. விண்மீன்கள் வானத்திலிருந்து விழுந்த வண்ணமிருக்கும்; வான்வெளிக் கோள்கள் அதிரும். அப்போது மிகுந்த வல்லமையோடும் மாட்சியோடும் மானிடமகன் மேகங்கள் மீது வருவதைக் காண்பார்கள். பின்பு அவர் வானதூதரை அனுப்பி, அவர்கள் மண்ணுலகில் ஒரு கோடியிலிருந்து விண்ணுலகில் மறுகோடிவரை நான்கு திசைகளிலிருந்தும் தேர்ந்துகொள்ளப்பட்டவர்களைக் கூட்டிச் சேர்ப்பார்.”
நற்செய்தி மலர்:
நீண்ட காலப் பணியை முடித்து,
நிலவும் வானும் ஓய்வெடுக்கும்.
ஆண்ட காலம் போதும் என்று
ஆதவன்கூட பாய் படுக்கும்.
வேண்டலேற்கும் இறையின் அரசோ,
விண்ணில் இறங்கிக் காட்சி தரும்.
மாண்டவர்கள் மீண்டும் எழும்ப,
மறுமையறிவு புரிய வரும்!
ஆமென்.

Image may contain: cloud, sky and outdoor

உம்மிடம் எம்மிடம் தேடுகிறார்!

உம்மிடம் எம்மிடம் தேடுகிறார்!
நற்செய்தி மாலை: மாற்கு 13:21-23.
“அப்பொழுது யாராவது உங்களிடம், ‘ இதோ, மெசியா இங்கே இருக்கிறார்; அதோ, அங்கே இருக்கிறார் ‘ எனச் சொன்னால் நீங்கள் நம்ப வேண்டாம். ஏனெனில் போலி மெசியாக்களும் போலி இறைவாக்கினர்களும் தோன்றி, முடியுமானால் தேர்ந்து கொள்ளப்பட்டவர்களையே நெறிதவறச் செய்ய அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் செய்து காட்டுவர். நீங்களோ கவனமாயிருங்கள். அனைத்தையும் முன்னதாகவே உங்களுக்குச் சொல்லிவிட்டேன்.”
நற்செய்தி மலர்:
யாரையும் நம்பா நிலைமைக்கு,
இன்றைய ஊழியர் தள்ளிவிட்டார்.
எதெற்கெடுத்தாலும் காசென்று,
எங்கும் வாங்கி அள்ளிவிட்டார்.
ஊரை ஏய்க்கும் ‘மெசியாக்கள்’,
ஒளியின் தூதராய் ஆடுகின்றார்
உலகோர் கிறித்து எங்கென்று,
உம்மிடம் எம்மிடம் தேடுகின்றார்!
ஆமென்.

Image may contain: 1 person, smiling
LikeShow More Reactions

Comment

துன்ப நாளைக் குறைப்பவரே!

துன்ப நாளைக் குறைப்பவரே!
நற்செய்தி மாலை: மாற்கு 13:17-20.
“அந்நாள்களில் கருவுற்றிருப்போர், பாலூட்டுவோர் ஆகியோர் நிலைமை அந்தோ பரிதாபம்! இவை குளிர்காலத்தில் நிகழாதபடி இறைவனிடம் வேண்டுங்கள். ஏனெனில் இவை துன்பம்தரும் நாள்களாய் இருக்கும். கடவுள் படைக்கத் தொடங்கிய காலத்திலிருந்து இந்நாள்வரை இத்தகைய வேதனை உண்டானதில்லை; இனிமேலும் உண்டாகப் போவதில்லை.ஆண்டவர் அந்நாள்களைக் குறைக்காவிடில் எவரும் தப்பிப் பிழைக்க முடியாது. ஆனால் தாம் தேர்ந்து கொண்டவர்களின் பொருட்டு அவர் அந்நாள்களைக் குறைத்திருக்கிறார் ″ .
நற்செய்தி மலர்:
துடிக்கும் அடியவர் துயரம் கண்டு,
துன்ப நாளைக் குறைப்பவரே,
குடிக்கும் கவலை குவளை உண்டு;
கொடுத்தேன் அதையும் குறைப்பீரே.
பிடிக்கும் உமது அன்பு கொண்டு,
பேதையரையும் நிறைப்பவரே,
முடிக்கும்படியாய்த் தந்த தொண்டு,
முழுமையாக நிறைப்பீரே!
ஆமென்.

No automatic alt text available.
LikeShow More Reactions

Comment

பாழாக்கும் அருவருப்பு!

பாழாக்கும் அருவருப்பு!
நற்செய்தி மாலை: மாற்கு 13:14-16.
“நடுங்க வைக்கும் தீட்டு’ நிற்கக்கூடாத இடத்தில் நிற்பதை நீங்கள் காண்பீர்கள். படிப்பவர் இதைப் புரிந்து கொள்ளட்டும். அப்போது யூதேயாவில் உள்ளவர்கள் மலைகளுக்குத் தப்பி ஓடட்டும். வீட்டின் மேல்தளத்தில் இருப்பவர் கீழே இறங்க வேண்டாம்; தம் வீட்டினின்று எதையும் எடுக்க அதில் நுழையவும் வேண்டாம். வயலில் இருப்பவர் தம் மேலுடையை எடுக்கத் திரும்பி வர வேண்டாம்.”
நற்செய்தி மலர்:
பாழாக்கும் அருவருப்பாய்,
பகைத் தலைவன் முன் நிற்க,
ஆழாக்கு உணவிற்காய்,
அடுப்படிக்குச் செல்லோமே!
கூழாக்கும் கன்மலையாய்,
கிறித்தரசர் பகையழிக்க,
வீழாத அடியவர்க்காய் ,
விருந்தளிப்பார், செல்வோமே!
ஆமென்.

Image may contain: sky and outdoor

ஊமை போன்றும் இருப்போம்!

ஊமை போன்றும் இருப்போம்!
நற்செய்தி மாலை: மாற்கு 13:9-11.
“நீங்கள் கவனமாயிருங்கள்; உங்களை யூதச் சங்கங்களிடம் ஒப்புவிப்பார்கள்; தொழுகைக்கூடங்களில் உங்களை நையப்புடைப்பார்கள்; என் பொருட்டு ஆளுநர் முன்னும் அரசர் முன்னும் நிறுத்தப்பட்டு அவர்கள் முன் எனக்குச் சான்று பகர்வீர்கள். ஆனால் எல்லா மக்களினத்தவர்க்கும் முதலில் நற்செய்தி அறிவிக்கப்பட வேண்டும்.அவர்கள் உங்களைக் கைதுசெய்து கொண்டு செல்லும்போது என்ன பேசுவது என நீங்கள் முன்னதாகவே கவலைப்பட வேண்டாம்; அந்த நேரத்தில் உங்களுக்கு அருளப்படுவதையே பேசுங்கள். ஏனெனில் பேசுவோர் நீங்கள் அல்ல. மாறாக, தூய ஆவியாரே.”
நற்செய்தி மலர்:
தீமை வெறுத்து, தெய்வம் தொழவே,
திருமறை வாக்கு மொழிகின்றோம்.
திறமையாளர் என்றவர் நினைத்துத்
தீங்கு செய்தும் பொழிகின்றோம்.
ஊமை போன்றும் இருக்கச் சொன்னீர்;
உம்சொற்படியே இருக்கின்றோம்;
உரைக்கும் ஆவியர் வாக்கை மட்டும்,
ஒலிக்க வாயைத் திறக்கின்றோம்!
ஆமென்.

Image may contain: one or more people and people sitting

Like

 

Like

 

Love

 

Haha

 

Wow

 

Sad

 

Angry

Comment

கலகம் வெடிக்கும், உலகம் துடிக்கும்!

கலகம் வெடிக்கும், உலகம் துடிக்கும்!
நற்செய்தி மாலை: மாற்கு 13:7-8.
“போர் முழக்கங்களையும் போர்களைப்பற்றிய செய்திகளையும் கேட்கும் பொழுது நீங்கள் திடுக்கிடாதீர்கள். இவை நிகழத்தான் வேண்டும். ஆனால் இவையே முடிவாகா. நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும்; பல இடங்களில் நில நடுக்கங்கள் ஏற்படும்; பஞ்சமும் உண்டாகும். இவை கொடும் வேதனைகளின் தொடக்கமே.”
நற்செய்தி மலர்:
கலகம் வெடிக்கும், உலகம் துடிக்கும்;
கடவுளின் பிள்ளையே கலங்காதே.
விலகும் துன்பம், விடியும் இன்பம்,
வீணாய் அழுது குலுங்காதே.
நிலத்தில் நடுக்கம், நேர்வழி இடுக்கம்,
நெஞ்சம் தளர்ந்து தயங்காதே.
அலகை தொடங்கும் அவலம் முடியும்,
ஆண்டவரின்றி இயங்காதே!
ஆமென்.

Image may contain: one or more people and text

கிறித்துவின் பெயரில் அந்திக்கிறித்து !

கிறித்துவின் பெயரில் அந்திக்கிறித்து!
நற்செய்தி மாலை: மாற்கு13:5-6.
“அதற்கு இயேசு அவர்களிடம் கூறியது: ‘ உங்களை யாரும் நெறிதவறச் செய்யாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, ‘ நானே அவர் ‘ என்று சொல்லிப் பலரை நெறிதவறச் செய்வர்.”
நற்செய்தி மலர்:
கடைந்தெடுத்தக் கயவரைக்கூட
கடவுள் என்றே எழுதுகிறார்.
கடவுளின் மைந்தன் என்று சொன்னால்,
கண்டிப்பாகத் தொழுதிடுவார்!
அடைய இயலா மீட்புற்றோர்தான்,
ஆண்டவருக்குள் வாழுகிறார்.
அந்திக்கிறித்து யாரெனத் தெரிந்து,
அவரைக் கை கழுவிடுவார்!
ஆமென்.

Image may contain: text

புத்தாண்டு வாழ்த்து!


 
இறைமகன் திருப்பெயரால்
இனிய புத்தாண்டில் மகிழுவோம்.
குறைவிலா இன்பம் கூடவே இருக்கும்;
குறி தவறா வாழ்க்கை வாழுவோம்!
-செல்லையாவும் வீட்டாரும்,
இறையன்பு இல்லம்,
செக்ரெட்டேரியட் காலனி,
இரட்டை ஏரி, சென்னை-99.
நாளைய நிகழ்வு!
நற்செய்தி மாலை: மாற்கு13:3-4.
“இயேசு கோவிலுக்கு எதிராக உள்ள ஒலிவ மலைமீது அமர்ந்திருந்த போது பேதுரு, யாக்கோபு, யோவான், அந்திரேயா ஆகியோர் அவரிடம் தனியாக வந்து, ‘ நீர் கூறியவை எப்போது நிகழும்? இவையனைத்தும் நிறைவேறப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன? எங்களுக்குச் சொல்லும் ‘ என்று கேட்டனர்.”
நற்செய்தி மலர்:
நான்கு அடியர் கேட்டபோது,
நாளைய நிகழ்வை முன்னுரைத்தீர்.
ஏங்குபவர்கள் இன்றும் கேட்க,
இரண்டாம் வருகையை நன்குரைத்தீர்.
தாங்குபவராய் நீர் இருப்பதனால்,
தடுமாறாது நடக்கின்றோம்.
தூங்குவோரைத் தட்டி எழுப்ப,
தூயவாக்கால் கடக்கின்றோம்!
ஆமென்.

கட்டிய கோயில்!

கட்டிய கோயில்!
நற்செய்தி மாலை: மாற்கு13:1-2.
“இயேசு கோவிலைவிட்டு வெளியே வந்தபோது அவருடைய சீடருள் ஒருவர், ‘ போதகரே, எத்தகைய கற்கள்! எத்தகைய கட்டடங்கள்! பாரும் ‘ என்று அவரிடம் சொல்ல, இயேசு அவரை நோக்கி, ‘ இந்த மாபெரும் கட்டடங்களைப் பார்க்கிறீர் அல்லவா! இங்குக் கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் ‘ என்றார்.”
நற்செய்தி மலர்:
சாலமன் எழுப்பிய கோயில் எங்கே?
சரியாய்ப் பார்த்து எழுதுவீர் இங்கே.
வேலைப் பணிகளின் சிறப்பு எங்கே?
வேளை வந்தது, அழிந்தது அங்கே.
காலம் கழித்து கட்டியதெங்கே?
கல்மேல் கல்லும் காணாதங்கே.
ஞாலம் மீட்கும் இடந்தான் எங்கே?
நமது நெஞ்சக் கோயில் இங்கே!
ஆமென்.

No automatic alt text available.