அலையும் நாளில் ஆண்டவர் தொழவே,
அவர்கள் செய்த கூடாரம்.
நிலைவாழ்வெங்கெனும் கேள்வி எழவே,
விலை கொடுத்தெவரும் வாங்கிட அரிதாம்,
விண் மீட்பீயும் திருப்பொருட்கள்,
சிலையாய் அல்ல, முன்னுரை நெறியாம்;
செய்தார் அவர்கள் அந்நாட்கள்!
(விடுதலைப் பயணம் 25-27).
The Truth Will Make You Free
பாலை நிலம் வழி செல்லும் நாளில்,
பருகிடத் தண்ணீர் கிடைக்காமல்,
காலை தொட்டு மாலை வரையில்,
கடுஞ்சினத்துடன் தேடினார்.
கோலை எடுத்து மோசே அடிக்க,
கொடுக்கும் பாறை கிறித்துவால்,
நாளை உயிர் நீர் நாமும் பெறுவோம்;
நம்பாதவர்தான் வாடினார்!
(விடுதலைப் பயணம் 17:1-7).