நேர்மை!

நேர்மை வாழ்வு!

இறை மொழி: யோவான் 17:25.

25. நீதியுள்ள பிதாவே, உலகம் உம்மை அறியவில்லை, நான் உம்மை அறிந்திருக்கிறேன்; நீர் என்னை அனுப்பினதை இவர்களும் அறிந்திருக்கிறார்கள்.

இறை வழி:

நூற்றுக்கு நூறு, நேர்மை என்றால்,

நிமிர்ந்து நிற்க, எவருமில்லை.

போற்றுதற்குரிய, இறையின் அன்பால்,

போகிறோமெனில், தவறுமில்லை.

மாற்றியமைக்கும், மைந்தன் வாழ்வில்,

மாசினைத் தேடின், எதுவுமில்லை.

கூற்றினைப் போல, முயல்வார் மீள்வில்,

கிறித்துவன்றி, புதுமையில்லை!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be an image of text

அன்பின் மாட்சி!

அன்பின் மாட்சி!

இறை மொழி: யோவான் 17:24.

இறை வழி:

மாட்சி என்ற இறையினுருவம், 

மைந்தனில் காண்கின்றோம். 

காட்சி கண்ட நாமுமடைவோம்;

கனிகையில் என்கின்றோம். 

நீட்சி என்ற நிலைவாழ்வின்பம், 

நிலந்தராது, சொல்கின்றோம்.

ஆட்சி பேறும் அவரது விருப்பம்;

அன்பினாலே வெல்கின்றோம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

காந்தியாரை நினைப்போம்!

காந்தியாரை நினைப்போம்!

காந்தி அடிகளும், கொன்றவனும்,

களத்தில் இன்று போட்டியிட்டால்,

ஏந்தி எடுத்து, வாக்களித்து,

யாரை வெற்றி பெறச் செய்வர்?

சாந்தி தருவதாய் வாக்குரைத்தும்,

சண்டை மூட்டிடும் ஊர்த்தலைவர்,

வாந்தி எடுக்கவே வைத்திருப்பர்;

வறியர் உணர்வின், உய்வர்!

-கெர்சோம் செல்லையா.

May be an image of 1 person

ஒற்றுமை!

ஒற்றுமை!

இறை மொழி: யோவான் 17:22-23.

22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

இறை வழி:

தந்தை மைந்தன் ஆவியர் ஒன்று.

தருகிற மாட்சி என்றும் நன்று.

மைந்தன் கூறும் வாக்கு இன்று,

மலர்கவே ஒற்றுமை என்று.

இந்தக் கொள்கை இல்லா வீடு,

இருந்தால் அதுவே சுடுகாடு.

நொந்தது போதும் ஒன்றாய்க் கூடு.

நிகழ்த்துமே, அன்பைப் பாடு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.