ஒற்றுமை!

ஒற்றுமை!

இறை மொழி: யோவான் 17:22-23.

22. நாம் ஒன்றாயிருக்கிறதுபோல அவர்களும் ஒன்றாயிருக்கும்படி, நீர் எனக்குத்தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்.

23. ஒருமைப்பாட்டில் அவர்கள் தேறினவர்களாயிருக்கும்படிக்கும், என்னை நீர் அனுப்பினதையும், நீர் என்னில் அன்பாயிருக்கிறதுபோல அவர்களிலும் அன்பாயிருக்கிறதையும் உலகம் அறியும்படிக்கும், நான் அவர்களிலும் நீர் என்னிலும் இருக்கும்படி வேண்டிக்கொள்ளுகிறேன்.

இறை வழி:

தந்தை மைந்தன் ஆவியர் ஒன்று.

தருகிற மாட்சி என்றும் நன்று.

மைந்தன் கூறும் வாக்கு இன்று,

மலர்கவே ஒற்றுமை என்று.

இந்தக் கொள்கை இல்லா வீடு,

இருந்தால் அதுவே சுடுகாடு.

நொந்தது போதும் ஒன்றாய்க் கூடு.

நிகழ்த்துமே, அன்பைப் பாடு!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.