அன்பின் மாட்சி!

அன்பின் மாட்சி!

இறை மொழி: யோவான் 17:24.

இறை வழி:

மாட்சி என்ற இறையினுருவம், 

மைந்தனில் காண்கின்றோம். 

காட்சி கண்ட நாமுமடைவோம்;

கனிகையில் என்கின்றோம். 

நீட்சி என்ற நிலைவாழ்வின்பம், 

நிலந்தராது, சொல்கின்றோம்.

ஆட்சி பேறும் அவரது விருப்பம்;

அன்பினாலே வெல்கின்றோம்!


ஆமென். 


-கெர்சோம் செல்லையா. 

காந்தியாரை நினைப்போம்!

காந்தியாரை நினைப்போம்!

காந்தி அடிகளும், கொன்றவனும்,

களத்தில் இன்று போட்டியிட்டால்,

ஏந்தி எடுத்து, வாக்களித்து,

யாரை வெற்றி பெறச் செய்வர்?

சாந்தி தருவதாய் வாக்குரைத்தும்,

சண்டை மூட்டிடும் ஊர்த்தலைவர்,

வாந்தி எடுக்கவே வைத்திருப்பர்;

வறியர் உணர்வின், உய்வர்!

-கெர்சோம் செல்லையா.

May be an image of 1 person