அழகும், பேரழகும்!

அழகும், பேரழகும்!

ஓடுதல் ஆற்றிற்கு அழகு.

ஒடுங்குதல் ஊற்றிற்கழகு.

பாடுதல் பறவைக்கு அழகு.

பாய்தலே விலங்கிற்கழகு.

கூடுதல் மனிதர்க்கு அழகு;

கொடுப்பதே நமக்கழகு.

தேடுதல் அறிவியல் அழகு.

தெரியும் இறை, பேரழகு!

-கெர்சோம் செல்லையா.

May be an image of deer

நானே அவர்!

நானே அவர்!

இறை மொழி: யோவான் 18: 6-9.

6. நான்தான் என்று அவர் அவர்களிடத்தில் சொன்னவுடனே, அவர்கள் பின்னிட்டுத் தரையிலே விழுந்தார்கள்.

7. அவர் மறுபடியும் அவர்களை நோக்கி: யாரைத் தேடுகிறீர்கள் என்று கேட்டார். அவர்கள்: நசரேயனாகிய இயேசுவைத் தேடுகிறோம் என்றார்கள்.

8. இயேசு பிரதியுத்தரமாக: நான்தானென்று உங்களுக்குச் சொன்னேனே; என்னைத் தேடுகிறதுண்டானால், இவர்களைப் போகவிடுங்கள் என்றார்.

9. நீர் எனக்குத் தந்தவர்களில் ஒருவனையும் நான் இழந்துபோகவில்லையென்று அவர் சொல்லிய வசனம் நிறைவேறத்தக்கதாக இப்படி நடந்தது.

இறை வழி:

தானே வந்து முன்னால் நிற்கும்,

தலைவன் துணிவை பாருங்கள்.

நானே அவர் என்பதைக் கூறும்,

நல்லிறைப் பண்பும் பாருங்கள்.

வீணே என்று விட்டு விட்டோடும்,

வீம்புத் தலைகளும் பாருங்கள்.

ஏனோ தானோ எனும் வழியல்ல;

இறையேசு பாதை சேருங்கள்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.

May be an image of text that says 'AS SOON THEN AS He HAD SAID UNTO THEM THEY WENT AM BACKWARD, AND FELL TO THE GROUND John 18:6'