வாக்கின் வலிமை!

வாக்கின் வல்லமை!நற்செய்தி: யோவான் 11: 43-44.43. இவைகளைச் சொன்னபின்பு: லாசருவே, வெளியே வா என்று, உரத்த சத்தமாய்க் கூப்பிட்டார்.44. அப்பொழுது, மரித்தவன் வெளியே வந்தான். அவன் கால்களும் கைகளும் பிரேதச் சீலைகளினால் கட்டப்பட்டிருந்தது, அவன் முகமும் சீலையால் சுற்றப்பட்டிருந்தது. இயேசு அவர்களை நோக்கி: இவனைக் கட்டவிழ்த்துவிடுங்கள் என்றார். நல்வாழ்வு: வாக்கின் வலிமை காண விரும்பின்,வருவோம் இயேசு கிறித்திடம்.நோக்கும் யாவும் அருஞ்செயலாகும்;நோக்க மறுப்பதே நம் விடம்.ஆக்கம் செய்தல் இறை விருப்பாகும்;அதுவே நமக்கு வரை படம்.போக்கும் ஐயம், புது வாழ்வுறும்;புறப்படுவோமா இவ் வழித்தடம்?ஆமென். -கெர்சோம் செல்லையா.