நம்புவோம்!

நம்புவோம்! நல் வாழ்வடைவோம்!

நற்செய்தி: யோவான் 11: 38-40.

38. அப்பொழுது இயேசு மறுபடியும் தமக்குள்ளே கலங்கிக் கல்லறையினிடத்திற்கு வந்தார். அது ஒரு குகையாயிருந்தது; அதின்மேல் ஒரு கல் வைக்கப்பட்டிருந்தது.39. இயேசு: கல்லை எடுத்துப்போடுங்கள் என்றார். மரித்தவனுடைய சகோதரியாகிய மார்த்தாள் அவரை நோக்கி: ஆண்டவரே, இப்பொழுது நாறுமே, நாலுநாளாயிற்றே என்றாள்.40. இயேசு அவளை நோக்கி: நீ விசுவாசித்தால் தேவனுடைய மகிமையைக் காண்பாய் என்று நான் உனக்குச் சொல்லவில்லையா என்றார்.

நல்வாழ்வு:

இன்பம் மட்டும் நாடிச் சென்றோர்,

இறை மறந்து வீழ்கையில்,

அன்பர் இயேசு தேடி வந்து,

அருட் பற்று ஊற்றுவார்.

துன்பம் மட்டும் ஆடக் கண்டோர்,

தெய்வப் பற்று கொள்கையில்,

நண்பர் என்று உடனிருந்து,

நன்மையாக மாற்றுவார்.

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.