கொடியரின் திட்டம்!

கொடியரின் திட்டம்!

நற்செய்தி: யோவான் 11:51-53.

51. இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும்,

52. அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்.

53. அந்நாள்முதல் அவரைக் கொலைசெய்யும்படிக்கு ஆலோசனைபண்ணினார்கள்.

நல்வழி: 

குருதி எடுக்கும் கொடுமைக்கென்று,
கோடி மக்கள் சேர்ந்தாலும்,
அருகு வந்து ஆண்டவர் நின்று,
அடியர் நம்மைக் காத்திடுவார்.
உறுதி கெடுக்கும் ஐயம் சென்று,
உள்ளுடம்பே சோர்ந்தாலும், 
திரிபு இல்லா தெய்வம் இன்று,
தீமை வராது பார்த்திடுவார்!

ஆமென். 

-கெர்சோம் செல்லையா.