வீண் பேச்சு தவிர்!

நற்செய்தி: யோவான் 11:36-37. 

அப்பொழுது யூதர்கள்: இதோ, இவர் அவனை எவ்வளவாய்ச் சிநேகித்தார் என்றார்கள்!37. அவர்களில் சிலர்: குருடனுடைய கண்களைத் திறந்த இவர், இவனைச் சாகாமலிருக்கப்பண்ணவும் கூடாதா என்றார்கள்.

நல்வாழ்வு:

வாயும் நெஞ்சும் நாறும் போது,

வாய்மை எங்ஙனம் மலரும்?

பாயும் வஞ்சம் ஊறும் சூது;

பண்பழிய, உளறும்.

தீயும் பஞ்சும் சேரும் போது,

தெரியும் யாவும் எரியும்.

ஆயும் பிஞ்சும் கூறும் தூது;

அழுக்கழிய, பிரியும்!

ஆமென்.

-கெர்சோம் செல்லையா.